29 ஜூன், 2012

25/06/2012


1. பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, யூசுப் ரசா கிலானி, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், முல்தான் தொகுதியில், அவரது மகன் போட்டியிட உள்ளார்.
2. பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில், ஐரோப்பிய கூட்டமைப்புகளின் வர்த்தக மாநாடு, வரும் 28ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு, சில முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.
3. எகிப்து நாட்டில் நடந்த தேர்தலில், சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றுள்ளதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
4. அடுத்த நிதியமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
5.சுகாதாரப் பிரச்னைகளை சரிவர நிவர்த்தி செய்யாத பட்சத்தில், அக்னி போன்ற ஏவுகனைகளை செலுத்துவதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது, என, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
6. எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, டில்லி மற்றும் மும்பையில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவச முறைகளை நிறுவ, இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர். டி.ஓ.,) முடிவு செய்துள்ளது
7. காஷ்மீரில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை, நேற்று முறைப்படி துவங்கியது. 
8. விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அப்புறப்படுத்த 4 கோடியே 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
9. தெற்காசியாவில் குப்பையில்லா நகரமாக உருவாக்க, இந்தியாவில் சிக்கிம் மற்றும் கோவை மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என, கோவை மாநகர மேயர் கூறினார்.
10. யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி  முன்னேறியது. விறுவிறுப்பான காலிறுதியில் சாபி அலோன்சா 2 கோல் அடிக்க, பிரான்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.                                                           

20/06/2012


1. பிரதமர் கிலானி, பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக மக்தூம் சகாபுதீன் பெயரை, பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரை செய்துள்ளது.
2. விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், இலண்டனில் கைது செய்யப்பட உள்ளதால், ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
3. மியான்மர் ஜனநாயக தலைவர், ஆங் சாங் சூகிக்கு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் நேற்று, கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
4. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் பெறும் விண்ணப்பங்களுக்கு, முகமை அதிகாரிகள் எப்படி பதில் அளிக்கவேண்டும் என்பது குறித்து, பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5.  குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான, 64 யானைகளின் வருடாந்திர சிகிச்சைக்காக, எட்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஒதுக்க, தேவஸ்தான நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
6. இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் ஜூன் 21ஆம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
7. தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றி, பொது இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்க கட்டுப்பாடு விதிக்க, உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
8. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், ஆழியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
9. புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தலையிட முடியாது என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
10. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள முதலாவது காலிறுதியில், போர்ச்சுகல் செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேற, ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி காத்திருக்கிறது.

20/06/2012


1. பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானியை தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
2. ஜி - 20 உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சிறிது நேரம் சந்தித்துப் பேசினர்.
3. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு உதவ இந்தியா 1,000 கோடி டாலர் (சுமார் ரூ. 55,000 கோடி) அளிக்க முன்வந்துள்ளது.
4. தங்களை நாடி வரும் அகதிகளை எந்த நாடும் திரும்ப அனுப்பக் கூடாது என்று சர்வதேச சமூகத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. சர் கிரீக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தோல்வி அடைந்தது.
6.  இறப்புக்கான இழப்பீடு வழங்கியதில் முறைகேடு செய்ததாக எல்.ஐ.சி. அதிகாரிகள் 3 பேர் மீது சிபிஐ  வழக்குப் பதிவு செய்துள்ளது.
7. மாணவ, மாணவிகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.
8. டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, பல நோய்களை உண்டாக்கும் கொசுப் புழுக்களை உண்ணும் மீன்கள், பிச்சனூர் கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
9. யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு நடப்புச் சாம்பியன் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் தகுதிபெற்றுள்ளன.

19/06/2012


1. சீனாவின் ஷென்சு-9 விண்கலம், விண்வெளியில் உள்ள, சீனாவின் விண் ஆராய்ச்சி மையத்துடன், நேற்று இணைந்தது.
2. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாட்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், புதிய ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
3. மெக்சிகோவிலுள்ள லாஸ் கபோஸ் நகரில், நடைபெற்று வரும் 7வது ஜி-20 உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பலநாட்டு அதிபர்களைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
4. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என,மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
5. அப்துல் கலாமின் இந்த அறிவிப்பு எனக்கு மன வேதனை அளிக்கிறது.   “மக்களின் ஜனாதிபதி கலாம்என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
6.நிபந்தனையின்றி போராட்டத்தை கைவிட்டு, வேலைக்குத் திரும்பினால், பணி நீக்கம் செய்யப்பட்ட விமான ஓட்டிகளை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளத் தயார் என, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் கூறியுள்ளார்.
7. பெட்ரோல் விலையில், இன்னும் சில நாட்களுக்கு மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
8. கோவை மாநகராட்சியில் குப்பையில் இருந்து உரம் தயாரித்தும், மீதமுள்ள கழிவுகளை அறிவியல்சார் முறையில், பாதுகாப்பாக மண்ணில் புதைத்தும், தீர்வு கண்டு வருகின்றனர். 
9. யூரோ கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல். ஒரு வெற்றி கூட பெறாத சோகத்தில் நாடு திரும்புகிறது நெதர்லாந்து.
                                                                                                         

18/06/2012


1. நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற 12க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், இவ்வாண்டு 71 ஆயிரம் ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன.
2. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.1 எனப் பதிவாகி யுள்ளது.
3. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை வைத்துள்ள வெளிநாட்டவர்களில், இந்தியர்கள், 55ஆவது இடத்தில் உள்ளனர். 
4.யங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலைச் சுற்றியுள்ள நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும், கண்காணிப்புக் கருவிகளைப்பொருத்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
5. தமிழக, கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில், மணிக்கணக்கில் வரிசையாக நிற்கும் வாகனங்களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
6. தென்மேற்குப்பருவ மழை பெய்யத் துவங்கியதையடுத்து வால்பாறையில் தேயிலை உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது.
7. இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்குப் பெருமைதேடித் தந்துள்ளார்.
8.யூரோ கோப்பைக் கால்பந்துத் தொடரின் காலிறுதிக்கு ஏ பிரிவிலிருந்து கிரீஸ் அணி முன்னேறியது.

15/06/2012


1. எகிப்தியப் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான, வருமான உச்சவரம்பை` 4.5 இலட்சத்தில் இருந்து ` 6 இலட்சமாக உயர்த்துவது தொடர்பாக முடிவெடுப்பதை, மத்திய அமைச்சரவை தள்ளிவைத்துள்ளது.
3.  சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
4. தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்தில் வழக்கத்தை விட, 50 விழுக்காடு குறைவாகப் பெய்துள்ளது என, வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர். 
5. முதுகலை ஆசிரியர் தேர்வு, முழுக்க முழுக்க, தகுதியின் அடிப்படையில் தான் இருக்கும். ஏமாற்று கும்பலிடம் தேர்வர்கள் ஏமாற வேண்டாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் வலியுறுத்தியுள்ளது. 
6. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், மன உளைச்சல் காரணமாக மாணவர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கலந்தாய்வு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
7.யூரோக் கோப்பைக் கால்பந்துப்போட்டியின் லீக் ஆட்டத்தில்போர்ச்சுக்கல் அணி டென்மார்க் அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
                                                                                                         

14/06/2012


 1.     ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நோபல் பரிசின் ரொக்கத் தொகை, 20 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது.
2.     இலங்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது, ஒரு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என, அந்நாட்டு அதிபரின் செயலர் தெரிவித்து உள்ளார்.
3.     ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி 44 நாட்களுக்குப் பதிலாக, இவ்வாண்டு 55 நாட்கள் நடைபெறும் என, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
4.     தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 5 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
5.     பீகார் , உ.பி., ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்த படியாக புத்த மதத்தை தழுவிய நான்காவது மாநிலமாக அருணாசல பிரதேசம் திகழ்கிறது.
6.     யூரோ கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி, டென்மார்க்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

16 மார்ச், 2012

17/03/2012


1. லிபியாவில் கடந்தாண்டு நடந்த மக்கள் புரட்சியின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி, ஐ.நா  பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
2. கடந்த 244 ஆண்டுகளாக உலகின் மிகப் பிரபலமான குறிப்புதவிப் புத்தகமாக விளங்கி வரும், "என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' தனது புத்தக வடிவ வெளியீடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
3.மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு,புதிய வரவுசெலவுத் திட்டத்தில், வருமான வரி விலக்கு வரம்பில் 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 இலட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
4. விண்வெளிக்கு செய்மதியைக் கொண்டுசெல்லும் நெடுந்தூர ஏவுகணை ஒன்றை ஏவவுள்ள வடகொரியாவின் திட்டத்தால் மேற்குலக அணி நாடுகள் கவலை அடைந்துள்ளன.
5. ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த ,இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டணி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 
6.  லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயாராவோம் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
7. கட்டாய தலைக்கவசம் நடைமுறைபடுத்தப்பட்டதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
8. சங்கரன்கோவில் தொகுதியில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
9. கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது சதத்தை அடித்து சாதனை நிகழ்த்தியுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10. ஆசிய கோப்பை மட்டைப்பந்துத் தொடரின் தகுதி ஆட்டத்தில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தியது.

15 மார்ச், 2012

16/03/2012


1. இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில், இலங்கைக்கு எதிராக 8 நாடுகள் விவாதம் செய்தன.
2.  ஜிம்பாப்வேயில் நிலவிவரும் நிதிப்பற்றாக்குறையால், இங்கு விரைவில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜிம்பாப்வே நிதியமைச்சர் டெண்டாய் பிட்டி கூறியுள்ளார். 
3.மும்பைத் தாக்குதல் தொடர்பாக விவகாரத்தில், விசாரணை நடத்தி அறிக்கை பதிவு செய்ய, பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை கமிஷனைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு மும்பை வந்தது.  
4. உத்தரப்பிரதேச மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு, நிர்வாகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். 
5. தமிழக மக்களவை உறுப்பினர்கள் பற்றி விமர்சனம் செய்ததற்காக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் கரியவாசம் மன்னிப்பு கேட்டார்
6.இந்தியாவின் வரவு செலவுத் திட்டம், இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால், முன் வைக்கப்படுகிறது.
7.த்தரப்பிரதேசத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறிய வகைக் கணினி வழங்கப்படும் என அம்மாநில முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். 
8. அன்னா ஹசாரே குழுவின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து, குழு உறுப்பினர்களுடன் ஹசாரே இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 
9. ஆசியக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10. இந்தியன் வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பயஸ் - செக் குடியரசின் ராடேக் ஸ்டெபனெக் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

14 மார்ச், 2012

15/03/2012


1. சீனா பெற்று வரும் பொருளாதார நன்மைகளைப் பாதுகாக்க மேலும் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று அந்நாட்டின் பிரதமர் வென் ஜியா போ கோரியுள்ளார்.
2. தி ஹேகிக்கிலிருந்து செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், காங்கோவின் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான தாமஸ் லுபாங்கா, போர்க் குற்றங்கள் புரிந்தார் என்று தனது முதல் தீர்ப்பில் கூறியுள்ளது.
3. ஜப்பானின் ஹோக்காய்டோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாகப் பதிவானது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 
4. மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் மற்றும் சலுகைகளைப் பறித்து ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5. கடந்த மூன்று ஆண்டுகளில் 700 பாகிஸ்தானியர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. 2012--13 ஆண்டிற்கான தொடர்வண்டி வரவு செலவுத் திட்ட்த்தில், அனைத்து வகைப் பயணச் சீட்டுக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ள. 
7. காய்கறி மற்றும் புரதச்சத்துப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.95 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
8. மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 260 லட்சம் டன் குறியீட்டு இலக்கை கடந்து வஉசி., துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
9. கோயமுத்தூர் காந்திபுரம் பகுதியில், விரிவான,ஒருங்கிணைந்த பேருந்து நிறுத்தமும், பல்லடுக்கு வாகன நிறுத்த வளாகமும் கட்டி, நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
10. அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன வேல்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் ராடேக் ஸ்டீபனெக் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரபலமான இடுகைகள்