29 ஜூன், 2012

14/06/2012


 1.     ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நோபல் பரிசின் ரொக்கத் தொகை, 20 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது.
2.     இலங்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது, ஒரு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என, அந்நாட்டு அதிபரின் செயலர் தெரிவித்து உள்ளார்.
3.     ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி 44 நாட்களுக்குப் பதிலாக, இவ்வாண்டு 55 நாட்கள் நடைபெறும் என, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
4.     தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 5 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
5.     பீகார் , உ.பி., ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்த படியாக புத்த மதத்தை தழுவிய நான்காவது மாநிலமாக அருணாசல பிரதேசம் திகழ்கிறது.
6.     யூரோ கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி, டென்மார்க்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...