19 ஜனவரி, 2012

19/01/2012


1. மியான்மரில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 
2. அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரிய அதிபர் பஷர் அல் அசாத்,உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
3. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். 
4. பதிமூன்று நாட்களாக நடந்த புத்தக கண்காட்சியில், மகாத்மா காந்தியின் சுயசரிதை நூலான, சத்திய சோதனை 5,000 பிரதிகள் விற்று, தமிழக வாசகர் மனதில் இடம் பிடித்துள்ளது.
5. தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணி, புத்தகப் பை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய் முதல்வர், அதிக
மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
6.  தமிழக அமைச்சரவையில் 4 பேரின் துறைகள் நேற்று மாற்றப்பட்டன.புதிய கல்வித்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்கிறார்.
7. ரிவாயு சரக்குந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தீர்வு காணும் விதத்தில்,முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
8. கோவை அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகளில் ஒன்றான, குறைந்த கட்டணத்தில் செய்யப்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில், கடந்தஆண்டு 5,861 பேர், பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர். 
9.  ரஞ்சி கோப்பையைக் கைப்பற்றுவோம் என தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன் லட்சுமிபதி பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
10.  இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் மட்டைப்பந்துஆட்டத்தில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.                               -                        
                                                                                                -பாரதிஜீவா

Free Code Script

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine