1 ஜனவரி, 2022

DRDO அமைப்பு தினம்

 



      ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி 1 அன்று, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation - DRDO) அதன் நிறுவன தினத்தை இன்று அனுசரிக்கிறது. 

     டிஆர்டிஓ -1958 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக வெறும் 10 ஆய்வகங்களுடன் நிறுவப்பட்டது மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கான அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. 

     இன்று, டிஆர்டிஓ பல அதிநவீன இராணுவ தொழில்நுட்பப் பகுதிகளில் பணிபுரிகிறது, இதில் ஏரோநாட்டிக்ஸ், பாதுகாப்பிற்கான ஆயுதங்கள், போர் வாகனங்கள், மின்னணுவியல், கருவிகள், பொறியியல் அமைப்புகள், ஏவுகணைகள், பொருட்கள், கடற்படை அமைப்புகள், மேம்பட்ட கணினி, உருவகப்படுத்துதல், சைபர், உயிர் அறிவியல் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும். 

    கோவிட் தொற்றுக்காலத்தின் போது டிஆர்டிஓவின் பங்களிப்பு மறக்க இயலாதவை. இந்தியாவில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க, கிட்டத்தட்ட 40 டிஆர்டிஓ ஆய்வகங்கள் 50 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களையும், 100 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளையும் போர்க்கால அடிப்படையில் உருவாக்கியுள்ளன. 

   PPE கருவிகள், சானிடைசர்கள், முகமூடிகள், UV-அடிப்படையிலான கிருமிநாசினி அமைப்புகள், ஜெர்மி க்ளீன் மற்றும் வென்டிலேட்டரின் முக்கியமான பாகங்கள் ஆகியவை மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் வென்டிலேட்டர் உற்பத்திக்கு வழிவகுத்தன. மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக டிஆர்டிஓ குறுகிய காலத்தில் டெல்லி, பாட்னா மற்றும் முசாபர்பூரில் மூன்று பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளை நிறுவியது. 


   மொபைல் வைராலஜி ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் (MVRDL) கோவிட்-19 ஸ்கிரீனிங் மற்றும் R&D நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக பல்வேறு இடங்களில் கோவிட் பரிசோதனை திறன்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

அர்ஜுன் டாங்க்

     அர்ஜுன் (Arjun MBT)) இந்தியாவின் டி. ஆர். டி. ஒ நிறுவனம் இந்திய தரைப்படைக்காக உருவாக்கிய ஒரு கவச வாகனமாகும் (டாங்கு). இது மகாபாரதத்தில் வரும் அர்சுனன் என்னும் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கபடுகிறது. இதன் உச்ச வேகம் 70 கி.மி. ஆகும். இந்திய ராணுவம் 2000ஆவது ஆண்டில் 124 அர்ஜுன்களை டி. ஆர் டி ஒ விடம் கோரியது. இது சென்னையில் உள்ள ஆவடி கவச வண்டிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதன் உருவாக்கம் பல்வேறு தாமதங்களையும் பல தோல்விகளையும் தாண்டி வந்தது ஆகும். இது இந்திய ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள டி-90 என்னும் கவச வாகனத்திற்கு பதிலாக எதிர்காலத்தில் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இன்று  எதிரிகளின் டாங்கிகளை அழிக்கும்  வகையில் அர்ஜூன் டாங்கியில் (எம்பிடி) லேசர் வழிகாட்டும் ஏவுகணையை (ஏடிஜிஎம்) பொருத்தி வெற்றிகரமாக சோதனை செய்தது. 

நாக் ஏவுகணை
     மக்களின் மனங்கவர்ந்த, அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார் என்பது நினைகூரத்தக்கது.


     இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்குப் பின்புலமாக இருந்து,நம் நாட்டை வலிமையாக்கும் இவ்வமைப்பின் பணிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளைச் சமர்ப்பிக்கிறோம்.


வி.எஸ்.ராகவன் பிறந்தநாள்

 

* காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கத்தில் (1925) பிறந்தவர். மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு புனித கொலம்பஸ் பள்ளி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். 

*  சிறு வயது முதலே நாடகங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்தார். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிய நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார். பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் கொண்டவர். துமிலன் நடத்திய ‘மாலதி’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

* ஓர் அச்சகத்தில் வேலை செய்தபோது, சக ஊழியர்கள் நடத்திய நாடகங்களில் நடித்தார். அப்போதுதான் மாலி, வாடிராஜ், நடராஜ், கே.பாலசந்தர் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து ‘இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரில் நாடக கம்பெனி தொடங்கினார். சென்னையில் பல இடங்களில் நாடகங்களை இந்த கம்பெனி நடத்தியது.

* கம்பெனி மூடப்பட்ட பிறகு கே.பாலசந்தரின் மேடை நாடகங்களில் நடித்தார். ‘நகையே உனக்கு நமஸ்காரம்’ என்ற நாடகம் மிகவும் பிரபலம். சினிமாவில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்தார். இவர் நடித்த ‘வைரமாலை’ என்ற மேடை நாடகம் 1954-ல் திரைப்படமாகத் தயாரானது. நாடகத்தில் ஏற்ற அதே கதாபாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் இவரது முதல் திரைப்படம்.

* தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக் குரல்’, ‘சவாலே சமாளி’, ‘வசந்த மாளிகை’, ‘சுமை தாங்கி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

* 30-35 வயது இருக்கும்போது, ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார். ‘உலக அளவில் தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசன்’ என்று அடிக்கடி கூறுவார்.

* நாகேஷ் இவரது நெருங்கிய நண்பர். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, ‘எனக்கு ஒரு ஸ்ட்ராங் ஃபில்டர் காபி’ என்றவாறே நுழைவாராம். ‘‘அவரைப் போன்ற அபாரமான நடிகர், அற்புதமான மனிதரைக் காண்பது அரிது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார். நாடக மேடையில் இருந்து என்னை சினிமாவுக்கு கொண்டுவந்தது நாகேஷ்தான் என்றும் சொல்வார்.

* திரைத்துறையில் 60 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். எம்ஜிஆர், சிவாஜி, பின்னர் ரஜினி, கமல் மட்டுமல்லாது, அஜித், விஜய், விமல் என 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

* சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அவ்வாறே, கடைசிவரை நடித்து, சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்தார். பல தொலைக்காட்சித் தொடர்கள், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

* அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர். நினைவாற்றல் மிக்கவர். 1000-க்கும் அதிகமான படங்கள், ஏராளமான நாடகங்கள் என வெற்றிகரமான நடிகராக வலம் வந்து நடிப்புத் துறையில் முத்திரை பதித்தவர் வி.எஸ்.ராகவன் 

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece