1 பிப்ரவரி, 2012

01/02/2012


1. பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில், அமெரிக்கா, ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வருவதாக, முதன் முறையாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். 
2. இலங்கையில், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கு, அதிகாரம் தருவது குறித்த அரசியல் சட்டதிருத்தத்தை, அமல்படுத்துவது குறித்து, நாடாளுமன்றத் தேர்வுக் குழுவே முடிவு செய்யும் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்தார்.
3. உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லிபிய நாட்டுக்கு, இந்தியா, உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ` 5 கோடி மதிப்பிலான, மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
4.  நாடு முழுவதும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
5. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு உதவும் வகையிலான, திட்டங்களை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
6. முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதா என்பதை, நேரில் ஆய்வு செய்ய, மத்திய அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.
7. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த உயர்வு கணக்கிடப்படும்.
8. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரண உதவிகளை அறிவிக்க உள்ளோம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
9.  தமிழகத்தில் உள்ள 19 ஆயிரம் அரசுப் பேருந்துகளில், 9,389 பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுவதாக,தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
10. இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் மட்டைப்பந்துப் போட்டி , ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புதன்கிழமை நடைபெறுகிறது.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece