25 ஜனவரி, 2022

தேசிய வாக்காளர் தினம்

     இந்தியத் தேர்தல் ஆணையமானது கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதனைக் குறிக்கும் விதமாக ஒவ்வோராண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் (National Voters’ Day) கொண்டாடப்படுகிறது. இது ராஷ்டிரிய மட்டதா திவாஸ் (Rashtriya Matdata Diwas) என்றும் அழைக்கப்படுகிறது. 


    இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) அமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையிலும்,  வாக்காளர்கள் சேர்க்கையை ஊக்குவித்தல், குறிப்பாக புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்த தினம் கொண்டாப்படுகிறது. அரசியலமைப்பின் 324 ஆவது பிரிவு, இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் 1950-ல் நடைமுறைக்கு வந்திருந்தாலும், இந்தத் தினத்தை, முறையாகக்  கொண்டாடத் தொடங்கியது 2011 இல் தான்.

தேசிய வாக்காளர் தினத்தின் குறிக்கோள்
(Objective of the National Voters’ Day) 

    இந்தியாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுதான் தேசிய வாக்காளர் தினத்தை மத்திய அரசு கொண்டாடத் தூண்டியது எனலாம். வாக்களிக்கும் பணியில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு  `Proud to be a voter, ready to vote’ என்று எழுதப்பட்ட பேட்ஜ்கள் வழங்கப்படும். வாக்காளர்களாகச் சேருவதில் பலருக்கும் ஆர்வமின்மை ஏற்பட்டதால், இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு, தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள்,    "தேர்தல்களை, உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்கதாக மாற்றுதல்” (Making Elections Inclusive, Accessible and Participative) என்பதே.

    தேர்தல்களின் போது வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்பதை எளிதாக்குவதற்கும், முழுமையான செயல்முறையை சிரமமின்றி மற்றும் அனைத்து வகை வாக்காளர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுவதற்கும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது.

    நாட்டில் அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி நாடு முழுவதும் 8.5 முதல் 10 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18 வயதை எட்டும் அனைத்து தகுதியான வாக்காளர்களையும் அரசு அடையாளம் காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் தங்கள் தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை ஜனவரி 25ஆம் தேதி பெறுவார்கள்.

    நாட்டை ஆளுகின்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும், அதிகாரமளிக்கும் முயற்சியை மேலும் வலுப்படுத்த, இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் பெருமை உணர்வைத் தூண்டுவதற்காக,  `No voter to be left behind’ என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது.

    மக்கள், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தவும், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருக்க குடிமக்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களை அரசாங்கம் இருகரம்கூப்பி  வரவேற்கிறது. 


    வினாடி வினாக்கள், விவாதங்கள், மாதிரி வாக்கெடுப்புகளை (quizzes, debates, mock polls) நடத்துவதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாளை அனுசரிக்க ஊக்குவிக்கப்படுகின்றன.

    இதனால் தகுதியுடைய மாணவர்கள்/மாணவர்களின் பெற்றோர்கள் வாக்களிக்க ஒரு புரிதல் ஏற்படும். இந்த முயற்சியை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு, இந்திய அரசு புதுமைகளுக்கான தேசிய விருது (National Award for innovation), என்ற ஒன்றை தேர்தல் எந்திரங்களால் தேர்தல் நடைமுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கிறது.

    சமூக ஊடகங்களில் தேசிய வாக்காளர் 
விழிப்புணர்வுப் 
போட்டிகள்

    'எனது வாக்கு எனது எதிர்காலம்- ஒரு வாக்கின் சக்தி' 2022


     சட்டமன்றத் தேர்தல்களில் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் தொடங்கப்படும். பாடல், ஸ்லோகன், வினாடி வினா, வீடியோ மேக்கிங் மற்றும் போஸ்டர் டிசைன், போட்டிகள் அனைவருக்குமானவை. வெற்றியாளர்களுக்கு உற்சாகமூட்டும் பணப் பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்படும்.

உறுதிமொழி



Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...