13 மார்ச், 2012

14/03/2012


1. வட மற்றும் தென் கொரிய நாடுகளின் இடையே உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு இம்மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செல்ல உள்ளார். 
2. உலகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை விசுவரூபம் எடுத்து வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பெரும் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. இலங்கையில் போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்னும், மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக,அம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
4. கிங்பிர் விமான நிறுவனத்துக்கு புதிதாக கடன் வழங்கும் திட்டமில்லை, என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 
5. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக உ.பி., மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி மனுத்தாக்கல் செய்தபோது, தனக்கு  . ` 111 கோடி அளவிற்கு சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
6. 2012-2013 ஆம் ஆண்டிற்கான மத்திய தொடர்வண்டி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படுகிறது.
7. சித்த, ஆயுர்வேத கல்லூரிகளை ஒரு வாரத்திற்குள் தொடங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
8. கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 
9. ` 731.151 கோடி மதிப்பிலான கோவை மாநகராட்சியின் வரவு செலவுத் திட்டத்தில் ` 27.71 கோடி அளவிற்கு பற்றாக்குறை உள்ளதாக மாநகரத் தந்தை அறிவிப்பு.
10. ஆசியக்கோப்பை மட்டைப்பந்துத் தொடரில், இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது,

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece