8 நவம்பர், 2021

மின்னல், இடி - பாதுகாப்பு

இடி, மின்னலின் போது....



வீட்டில் இருக்கும்போது செய்யக்கூடியவை

1) இருண்ட கருமேகங்களையும், அதிகப்படியான காற்றினையும் கவனிக்க வேண்டும்.

2) இடியின் சப்தத்தை நீங்கள் கேட்டால், மின்னல் தாக்கும் இடத்தின் அருகில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

3) இடி மற்றும் மின்னல் குறித்த முன்னெச்சரிக்கைத் தகவல்களுக்கு, ஊடகங்களைத் தொடர்ந்து கவனிக்கவும்.

4) வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும், முடிந்த வரை பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

5) ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். வெளியில் உள்ள பொருட்களை (தளவாடங்கள், தொட்டிகள் முதலியன) பாதுகாப்பாக வைக்கவும்.

6) கால்நடைகள் உட்புறம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

7) மின்னல் தாக்கத்தின் போது, மின் எழுச்சி ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவசியமற்ற மின்சாதனங்களின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது பொருட்கள் வீசி எறியப்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மரக்கட்டைகள், இடிந்த சிதிலங்கள், தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்

8) மின்னல் தாக்கத்தின் போது தொலைபேசி, மின் சாதனங்கள், கம்பி வேலிகள், மரங்கள், மலை உச்சி ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும்போது செய்யக்கூடாதவை

1) தரையில் சமமாக படுக்கும் போது, மின்னலின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தரையில் சமமாக படுக்கக்கூடாது.

2) இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது மரங்களில் மின்சாரம் பாயும் என்பதால் மரங்களுக்கு அடியில் நிற்கக் கூடாது.

3) இரப்பர் செருப்புகள் மற்றும் கார் டயர்கள் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவாது என்பதால் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

பயணம் மேற்கொள்ளும் போது செய்யக்கூடியவை

1) சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் வேளான் வாகனங்களில் பயணிக்கும் போது உடனடியாக பாதுகாப்பான தங்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

2) படகுச் சவாரி மற்றும் நீச்சல் மேற்கொள்ளும் போது மின்னல் தாக்கம் ஏற்படின் உடனடியாக கரைக்குத் திரும்பி பாதுகாப்பான தங்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

3) புயலின் தாக்கத்தின் போது மீட்பு உதவி கிடைக்கும் வரை அல்லது புயல் கடந்து செல்லும் வரை உங்களது வாகனத்திலேயே இருக்க வேண்டும். வாகனத்தில் உள்ள உலோக பாகங்களை நீங்கள் தொடாமல் இருந்தால் உங்கள் வாகனத்தின் உலோக கூரை உங்களுக்கு பாதுகாப்பாக அமையும்.

4) வாகனங்களில் ஜன்னல்களை மூடி வைக்கவும். மரங்கள் மற்றும் மின் இணைப்புகளில் அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

செய்யக்கூடாதவை

1) உலோக குழாய்களில் மின்னல் பாயும் என்பதால், இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது குளிப்பதை தவிர்க்கவும். மேலும் ஓடும் நீரோடைகளிலிருந்து இருந்து விலகி இருக்கவும்.

2) கதவுகள், ஜன்னல்கள், நெருப்பு மூட்டப்படும் இடங்கள், அடுப்புகள், குளியல் தொட்டிகள் மற்றும் மின்சாரம் பாயும் பொருட்களிலிருந்து விலகி இருக்கவும்.

வெளியில் இருக்கும் போது செய்யக்கூடியவை

1) உடனடியாக பாதுகாப்பான தங்குமிடத்திற்கு செல்ல வேண்டும். உலோகக் கட்டமைப்புகளையும் கட்டுமானங்களையும், உலோகத் தகடு கொண்ட தங்குமிடங்களையும் தவிர்க்கவும்.

2) தாழ்வான பகுதியில் உள்ள தங்குமிடத்தை கண்டறிவதோடு, அந்த இடம் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகாத இடம் என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தில் தங்க வேண்டும்.

3) குதிகால்களை ஒன்று சேர்த்து, தலை குனிந்து தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும்.

4) உங்களது கழுத்திற்குப் பின்னால் இருக்கும் முடியில் நீங்கள் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மின்னலின் தாக்கம் உடனடியாக நிகழப்போகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சிகிச்சை

1) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் இயன்றவரை அடிப்படையான முதலுதவிச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

2) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபரது உடலில் மின்சாரம் இருக்காது என்பதால், காலம் தாழ்த்தாமல் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

3) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதையும் செவித்திறன் மற்றும் கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளனவா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

4) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபருக்கு தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரது உடலில் எந்த பகுதியில் மின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும், காயத்திற்கான அடையாளங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.

டாக்டர்.கமல் ரணதிவே பிறந்த தினம்

 



புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் பிரபலமான இந்திய உயிரணு உயிரியலாளர் டாக்டர் கமல் ரணதிவேயின் பிறந்தநாளையொட்டி, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை (Doodle)வெளியிட்டு, கூகுள் கௌரவித்துள்ளது.

   இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் கமல் ரணதிவே, புற்றுநோய் ஆராய்ச்சிக்காகவும், அறிவியல் மற்றும் கல்வியின் மூலம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பிற்காகவும் பாடுபட்டவர்.

    கமல் ரணதிவே கடந்த 1917 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள புனேயில் பிறந்தவர். இந்தியாவில் முதன் முறையாக பெண் விஞ்ஞானிகளுக்கான சங்கத்தை தொடங்கியவரும் கூட.

1949 ஆம் ஆண்டில், இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் (ICRC) பணிபுரிந்த பொழுது உயிரணுக்கள் பற்றிய ஆய்வான சைட்டாலஜியில் முனைவர் பட்டம் பெற்றார்.

உயிரணு உயிரியலில் மருத்துவப் பட்டம் பெற்ற அவரின் ஆராய்ச்சி, புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

    மார்பகப் புற்றுநோய்க்கும் மரபுவழிக்கும் இடையேயும் அதுபோல புற்றுநோய்களுக்கும் சில வைரஸ்களுக்கும் இடையேயும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தவர்.

  மருத்துவம் பயின்று, நம்முடைய சமூகத்தினருக்குச் சேவையாற்ற வேண்டும் என்று இந்திய மாணவர்களை, தொடர்ந்து ஊக்குவித்துப் பலரை மக்கள் பணியில் ஈடுபடுத்தியவர்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...