22 நவம்பர், 2021

உலக தொலைக்காட்சி தினம்

     


     1996ம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் பரிந்துரையின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ஆம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. 
ஐக்கிய நாடுகள் சபையின் டிசம்பர் 17, 1996 இல் நடந்த 99ஆவது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தின்படி இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

     முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது.தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைக்கூறுவதும், தொலைக்காட்சியினூடாக, உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு,சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதும்,மற்றும் தங்களது கலை, கலாச்சார, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்வதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருள்களாகக் கொள்ளப்படுகின்றன. 

     இத்தினத்தில் தொலைக்காட்சியின் கண்டுபிடிப்பு பற்றி சற்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். 1926ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு எனும் அறிவியலறிஞர்தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். ஆனால் தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

     'பில்லோ பான்ஸ்வர்த்' என்பவர் தொலைக்காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபைக் 'விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின்" என்பவர் கண்டுபிடித்தார். இருப்பினும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் அறிமுகம் செய்தவர் என்பதனால் 'ஜான் லூகி ஃபெர்டு" 'தொலைக்காட்சிக் கண்டுபிடித்தவர்" என்று இனங்காட்டப்படுகின்றார்.

      தொலைக்காட்சி மிகச் சிறந்த ஊடகம். அதன் மூலம் மக்களுக்கு அரிய பல செய்திகளைக் குறித்த நேரத்தில் கொண்டுசேர்க்க இயலும்.ஒருதலைப்பட்சமின்றி நடுநிலையான செய்திகளைத் தருவதன் மூலமே மக்கள் மனங்களில் தொலைக்காட்சி ஊடகம் இடம்பெற இயலும்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece