5 மார்ச், 2012

06/03/2012


1.ரஷ்யாவில் மூன்றாவது தடவையாக, விலாடிமீர் புடின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்யும்படி, சர்வதேசக் காவல்துறைக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
3. இந்தியா-பாகிஸ்தான், இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்த, பாகிஸ்தான் பிரதமர் கிலானி முக்கிய பங்கு வகித்துள்ளார் என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 
4. தில்லியின் மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், ஹரியானா மாநிலத்தில் உள்ள பஹாதுர்கா என்ற இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.9 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
5. விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருக்கும் இஸ்ரேல் நாட்டு பெண் ‌எழுத்தாளரை நாடு கடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
6. மாநிலங்களவையில் 58 உறுப்பினர்களின் பதவிகாலம் அடுத்த மாதம் ஏப்ரலில் முடிவடைவதையொட்டி, அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
7. மதுரை மாநகராட்சியில் கொசுத்தொல்லையை ஒழிக்கும் விதமாக, ஒரு லட்சம் வீடுகளுக்கு இலவச கொசு வலை வழங்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
8. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைத்தொகுதிகளின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
9. பாட்னா நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இரானிய மகளிர் அணியை 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் வீழ்த்தினர்.
10. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும், முத்தரப்பு மட்டைப் பந்துப் போட்டியின் இரண்டாவது இறுதிப் போட்டியில், இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் இன்று மோதுகின்றன.

Free Code Script

05/03/2012


1. நேற்று நடைபெற்ற ரஷிய அதிபர் பதவிக்கான தேர்தலில், விளாடிமிர் புதினுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
2. இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரசாரத்தின்போது மகாத்மா காந்தியையும், நெல்சன் மண்டேலாவையும் நினைவு கூர்ந்தார்.
3.  சீனாவின் இராணுவச் செலவினம், இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி டாலர்களைத் தாண்டியுள்ளது.
4.  இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்ரம் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
5. தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 40 கோடி பேரின் விவரங்களை பதிவு செய்யும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் தலைவர் நந்தன் நைல்கேணி தெரிவித்தார்.
6. திருப்பதி கோயிலில் பல்வேறு இனங்களின் வரவு- செலவுகள் மூலம் இந்த ண்டு `2010 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
7. பெங்களூரு நீதிமன்றத்தில்,பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக, ஐந்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். 25 ழக்கறிஞர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8. இலங்கை தமிழர்களின் குழந்தைகள் விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கான திட்டத்தின் கீழ்,இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
9. கடற்படை பாதுகாப்புடன் கச்சத் தீவு அந்தோனியார் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் இந்தியா, இலங்கையை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10. பிரிஸ்பேனில் நடந்த முத்தரப்பு மட்டைப்பந்துப் போட்டி,ஒருநாள் தொடரின் முதல் இறுதியில்,ஆஸ்திரேலிய அணி, இலங்கையை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

Free Code Script

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece