5 மார்ச், 2012

06/03/2012


1.ரஷ்யாவில் மூன்றாவது தடவையாக, விலாடிமீர் புடின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்யும்படி, சர்வதேசக் காவல்துறைக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
3. இந்தியா-பாகிஸ்தான், இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்த, பாகிஸ்தான் பிரதமர் கிலானி முக்கிய பங்கு வகித்துள்ளார் என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 
4. தில்லியின் மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், ஹரியானா மாநிலத்தில் உள்ள பஹாதுர்கா என்ற இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.9 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
5. விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருக்கும் இஸ்ரேல் நாட்டு பெண் ‌எழுத்தாளரை நாடு கடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
6. மாநிலங்களவையில் 58 உறுப்பினர்களின் பதவிகாலம் அடுத்த மாதம் ஏப்ரலில் முடிவடைவதையொட்டி, அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
7. மதுரை மாநகராட்சியில் கொசுத்தொல்லையை ஒழிக்கும் விதமாக, ஒரு லட்சம் வீடுகளுக்கு இலவச கொசு வலை வழங்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
8. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைத்தொகுதிகளின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
9. பாட்னா நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இரானிய மகளிர் அணியை 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் வீழ்த்தினர்.
10. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும், முத்தரப்பு மட்டைப் பந்துப் போட்டியின் இரண்டாவது இறுதிப் போட்டியில், இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் இன்று மோதுகின்றன.

Free Code Script

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...