5 நவம்பர், 2021

சுனாமி விழிப்புணர்வு நாள் - நவம்பர் 5

உலக சுனாமி விழிப்புணர்வு நாள்



 உலக சுனாமி விழிப்புணர்வு தினம் என்பது ஜப்பானின் சிந்தனையாகும்.

     சுனாமி என்பது ஜப்பான் சொல். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை. எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உள்ளன. தமிழில் “ஆழிப்பேரலை " என்று அழைக்கப்படுகிறது.

காரணங்கள்:

     கடலில் உள்ள தரைப்பகுதிக்கு அடியில் நிலத்தட்டுகள் நகரும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது அங்கு திடீர் மாற்றம் ஏற்படும். அப்போது கடல் கொந்தளித்து இராட்சத அலைகள் உருவாகி அருகில் உள்ள அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதைச் சுனாமி என்று அழைக்கிறார்கள்.

     கடல் அடியில் பூகம்பம் மட்டுமல்லாமல், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து விண்கல் விழுதல் ஆகியனவற்றின் காரணமாகவும் ‘சுனாமி’ ஏற்படுகிறது.

பரவும் விதம்:

     சுனாமி என்பது அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்குச் சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுனாமியின் வேகம் ஒவ்வொரு முறையும் வேறுபடுகிறது.

விழிப்புணர்வு:

     2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் எடுக்கப்பட்ட முடிவின் படி,  நவம்பர் 5-ஆம் தேதியை, உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.

     சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பைப் பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள், அதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப் படுகின்றன.

     எப்போதாவது ஒரு முறை அதிசயமாக நேரக்  கூடிய ஓர் இயற்கைச் சீற்றம்தான் சுனாமியாகும். ஆனால் மிகவும் பயங்கரமானது.  

       கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட 58 சுனாமிகளால்  மட்டும் 2 லட்சத்து 60ஆயிரம் பேர்  மாண்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு சுனாமிக்கு 4600 பேர் என்ற வீதத்தில்  பலியாகியிருக்கின்றனர்.

விழிப்புடன் இருப்போம்; வரும் முன் காப்போம்

நன்றி: NHK Tv

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...