14 மார்ச், 2012

15/03/2012


1. சீனா பெற்று வரும் பொருளாதார நன்மைகளைப் பாதுகாக்க மேலும் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று அந்நாட்டின் பிரதமர் வென் ஜியா போ கோரியுள்ளார்.
2. தி ஹேகிக்கிலிருந்து செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், காங்கோவின் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான தாமஸ் லுபாங்கா, போர்க் குற்றங்கள் புரிந்தார் என்று தனது முதல் தீர்ப்பில் கூறியுள்ளது.
3. ஜப்பானின் ஹோக்காய்டோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாகப் பதிவானது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 
4. மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் மற்றும் சலுகைகளைப் பறித்து ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5. கடந்த மூன்று ஆண்டுகளில் 700 பாகிஸ்தானியர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. 2012--13 ஆண்டிற்கான தொடர்வண்டி வரவு செலவுத் திட்ட்த்தில், அனைத்து வகைப் பயணச் சீட்டுக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ள. 
7. காய்கறி மற்றும் புரதச்சத்துப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.95 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
8. மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 260 லட்சம் டன் குறியீட்டு இலக்கை கடந்து வஉசி., துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
9. கோயமுத்தூர் காந்திபுரம் பகுதியில், விரிவான,ஒருங்கிணைந்த பேருந்து நிறுத்தமும், பல்லடுக்கு வாகன நிறுத்த வளாகமும் கட்டி, நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
10. அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன வேல்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் ராடேக் ஸ்டீபனெக் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece