தமிழ் தமிழ்
தமிழ் மக்களுக்கும், தமிழ்வழி மாணவர்களுக்கும்
12 மே, 2026
International Nurses Day -May 12 - May 19
சர்வதேச செவிலியர் தினம்
மே 12 – ஒரு சிறப்பான நாள்
நவீன
செவிலியர் தொழிலின் தாயாகப் போற்றப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல்
அவர்களின் பிறந்தநாளான மே 12 ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச செவிலியர்
தினமாக கொண்டாடப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த நாள்
சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.
செவிலியர்களின் சேவை
மருத்துவமனைகளில்
நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது மட்டுமல்ல, செவிலியர்களின் பணி மிகவும்
பரந்தது. நோயாளியின் உடல் நலனைக் கண்காணித்தல், உணர்வுப்பூர்வமான ஆதரவு
அளித்தல், மருத்துவரின் சிகிச்சையைச் சரியாகச் செயல்படுத்துதல் என்று
இரவும் பகலும் அயராது உழைக்கிறார்கள். கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில்
உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய செவிலியர்கள் உலகம் முழுவதும் நெகிழ
வைத்தனர்.
புளோரன்ஸ் நைட்டிங்கேல் – ஓர் ஒளிமயமான வரலாறு
கிரிமியா
போரின் போது, ஆயிரக்கணக்கான காயமடைந்த வீரர்களுக்கு இரவிலும் விளக்கேந்தி
சேவை புரிந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் "விளக்கேந்திய மகள்" என்று
அழைக்கப்பட்டார். நவீன செவிலியர் கல்வியை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்
அவரே. அவரது தியாக உணர்வு இன்றும் லட்சக்கணக்கான செவிலியர்களுக்கு
உந்துசக்தியாகத் திகழ்கிறது.
இந்தியாவில் செவிலியர் சேவை
இந்தியாவில்
சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பதிவுபெற்ற செவிலியர்கள் உள்ளனர்.
கிராமப்புற மருத்துவமனைகளிலிருந்து, நகர்ப்புற சிறப்பு மையங்கள் வரை
செவிலியர்கள் இல்லாத இடமே இல்லை. ஆயினும், உலக சுகாதார நிறுவனத்தின்
தரத்திற்கு ஏற்ப இன்னும் கூடுதல் செவிலியர்கள் தேவை என்பது நிதர்சனமான
உண்மை.
நன்றி சொல்வோம்
நோயாளிகள்
வலியில் துடிக்கும் போது, குடும்பத்தினர் கண்ணீரில் நிற்கும் போது,
அருகில் இருந்து அன்போடு கை பிடிப்பவர்கள் செவிலியர்கள். அவர்களது
தூக்கமில்லா இரவுகளும், அயராத உழைப்பும் எண்ணிலடங்கா உயிர்களைக்
காப்பாற்றியுள்ளன. இந்த செவிலியர் தினத்தில் நாம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவிப்போம்.
"ஒரு செவிலியின் கை — கடவுளின் கை."
11 மே, 2026
National Technology Day - MAY 11
National Technology Day
National Technology Day in India is celebrated annually
on May 11, and in 2026, it falls on a Monday. The day commemorates
India's 1998 Pokhran nuclear tests and highlights scientific,
technological, and innovation achievements, frequently focusing on a
"Whole-of-Government" approach to a developed, or Viksit Bharat.
Key Aspects of National Technology Day 2026:Theme & Focus:
The
2026 focus includes "Responsible Innovation for Inclusive Growth" and a
"Whole-of-Government" approach emphasizing sustainable technologies in
Earth sciences, oceanography, and AI.Celebration Highlights: Events are
centered on scientific excellence and self-reliance, with events at
institutions such as the National Science Centre, Guwahati, the
CSIR-Central Leather Research Institute in Chennai, and the
BRIC–National Institute of Immunology, New Delhi.Significance: It serves
as a tribute to the scientific and technological advancements that
strengthen India's innovation ecosystem.
Background and Purpose:1998 Pokhran Test:
The
day honors the successful firing of the Shakti-I nuclear missile at the
Pokhran range in Rajasthan on May 11, 1998.Technological Milestones: It
also marks the first flight of the Hansa-3 aircraft and successful
tests of the Trishul missile in 1998.Recognition: Established by former
PM Atal Bihari Vajpayee, the day emphasizes the importance of
scientists, engineers, and researchers, encouraging new ideas to improve
Indian technology.
10 மே, 2026
கேயாஸ் எனும் நம்பிக்கை நட்சத்திரம்
2021 ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை, ஆப்கானிஸ்தானின்,காபூல் நகரின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று வயதான பெல்ஜியன் மலினாய் இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் (கேயாஸ்) வெறிச்சோடிய விமான நிறுத்துமிடத்தில் (ஆங்கார்) உட்கார்ந்திருந்தான். கடைசி அமெரிக்க விமானம் ஆறு மணி நேரத்திற்கு முன்பே புறப்பட்டுவிட்டது. வெளியேற்றம் முடிந்துவிட்டது.
கேயாஸ் தனித்து விடப்பட்டிருந்தான்.வேண்டுமென்றே
அல்ல. வெளியேற்றத்தின் குழப்பம். பதட்டம். அவசரம். இறுதி
வெளியேற்றத்தின்போது எஜமான் வெப்பிடமிருந்து கேயாஸ் பிரிந்துவிட்டான். வெப் வேறொரு
விமானத்தில் ஏற்றப்பட்டான். கேயாஸ் அடுத்த விமானத்தில் வருவான் என்று
சொல்லப்பட்டது. அடுத்த விமானம் வரவே இல்லை.
கேயாஸ் முதல் நாளில் தப்பித்தான். வெப் அவனை விட்டுச் சென்ற ஆங்காரிலேயே காத்திருந்தான்.கேயாஸ் முதல் வாரம் தப்பித்தான். கைவிடப்பட்ட இராணுவ உணவுப் பொருட்களிலிருந்து கிடைத்ததைத் தின்று உயிர்வாழ்ந்தான். கேயாஸ் தாலிபான் கட்டுப்பாட்டிலிருந்த காபூலில் 47 நாட்கள் தப்பித்தான்- தனியாக, மறைந்து, காத்திருந்து.
ஏனென்றால் வெப் அவனை என்றும் கைவிட்டுவிடமாட்டான் என்ற நம்பிக்கையில் கேயாஸ் உயிர்வாழ்ந்தான். அமெரிக்காவில் வெப் மனம் தவித்துக் கொண்டிருந்தான். அறிக்கைகள் தாக்கல் செய்தான். நாட்டின் முக்கிய உறுப்பினர்களை அழைத்தான். மீட்பு அமைப்புகளைத் தொடர்பு கொண்டான். செய்தி சேனல்களில் தோன்றினான். CNN சேனலில் குரல் தழுதழுக்க சொன்னான்: "என் நாயை ஆஃப்கானிஸ்தானில் விட்டுவிட்டேன். என் சகோதரனை விட்டுவிட்டேன். நான் அவனை திரும்பப் பெறுவேன்."
இராணுவம்
சொன்னது — இது இயலாத காரியம் என்று. காபூல் வீழ்ந்துவிட்டது. தாலிபான், விமான நிலையத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு நாயை வெளியே எடுக்க வழியில்லை
என்று.வெப்புக்கு இயலாமை என்பது ஒரு பொருட்டே இல்லை. அவன், வீரர்களால் நடத்தப்படும் மீட்பு நடவடிக்கையான "பைனாப்பிள் எக்ஸ்பிரஸை"
தொடர்பு கொண்டான். கேயாஸின் கடைசியாக அறியப்பட்ட இடத்தை அவர்களிடம்
சொன்னான். புகைப்படங்களையும், காணொளிகளையும் அனுப்பினான். கண்டுபிடிக்க உதவக்கூடியது எதுவாக இருந்தாலும் கொடுத்தான்.
47 நாட்களும் வெப் தூங்கவில்லை. சரியாக சாப்பிடவில்லை. வெறும் செய்திக்காக காத்திருந்தான். அக்டோபர் 16, 2021. அவன் தொலைபேசி ஒலித்தது.
"நாங்கள் அவனை கண்டுபிடித்தோம்," குரல் சொன்னது. "கேயாஸை கண்டுபிடித்தோம்."
ஒரு
மீட்புக் குழு காபூலுக்கு உள்ளே சென்றிருந்தது. வெப்பின் தகவல்களைப் பயன்படுத்தியது. கேயாஸை ஆங்காரில் கண்டுபிடித்தது. இன்னும் அங்கேயே
இருந்தான். இன்னும் காத்திருந்தான் - நாற்பத்தேழு நாட்களுக்கு பிறகும்.
கேயாஸ் மெலிந்திருந்தான். நீர்ச்சத்து இல்லாமல் இருந்தான். மனரீதியாகக் காயப்பட்டிருந்தான் - ஆனால் உயிரோடு இருந்தான்.
மீட்பு - மூன்று நாட்கள் எடுத்தது. தாலிபான் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கேயாஸை
கடத்துவதற்கு. சோதனைச்சாவடிகள் தாண்டி. ஆபத்துகள் கடந்து.
அவர்கள் அவனை வெளியே கொண்டு வந்தார்கள்.
அக்டோபர் 19, 2021. கேயாஸ் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினான். வெப் ஓடுபாதையில் காத்திருந்தான். கூண்டைத் திறந்தபோது கேயாஸ் அசையவில்லை. வெப்பை ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தான்.
"நான்தான் நண்பா," வெப் முழந்தாளிட்டுச் சொன்னான். "நான் திரும்பி வருவேன் என்று வாக்களித்தேன்- திரும்பி வந்துவிட்டேன்"
கேயாஸ் மெல்ல வெளியே வந்தான். வெப்பிடம் நடந்து சென்றான். அவன் கைகளில் சரிந்து விழுந்தான். அந்தச் சந்திப்புக் காணொளி வைரல் ஆனது. மூன்று நாட்களில் பதினேழு மில்லியன் பார்வைகள்.
ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை மக்கள் பார்க்கவில்லை.
ஆறு மாதங்களுக்கு, கேயாஸ், வெப் அறையில் இல்லாமல் தூங்கவில்லை. வெப் ஊட்டாமல் சாப்பிடவில்லை. வெப் முன்னால் போகாமல், வெளியே போகவில்லை.
"அவன்
நான் மீண்டும் அவனை விட்டுவிடுவேன் என்று பயப்படுகிறான்," வெப் ஒரு
நேர்காணலில் சொன்னான். "அவனைக் குறை சொல்ல என்னால் முடியாது. நான் ஒருமுறை
விட்டுவிட்டேன். மிகவும் கொடூரமான இடத்தில். மிகவும் கொடூரமான நேரத்தில்.
"அவன் எனக்காக 47 நாட்கள் காத்திருந்தான். நான் இனி ஒருபோதும் போகமாட்டேன் என்பதை அவன் உணரும்வரை என் வாழ்நாள் முழுவதும் உறுதிப்படுத்துவேன்."
"அவன் எனக்காக 47 நாட்கள் காத்திருந்தான். நான் இனி ஒருபோதும் போகமாட்டேன் என்பதை அவன் உணரும்வரை என் வாழ்நாள் முழுவதும் உறுதிப்படுத்துவேன்."
மூன்று ஆண்டுகள் கடந்தும் கேயாஸ் இன்றும் வெப்பின் நெஞ்சில் தலை வைத்துத் தூங்குகிறான். இன்றும் எங்கும் அவன் பின்னாலேயே வருகிறான்.
9 மே, 2026
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured post
-
2021 ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை, ஆப்கானிஸ்தானின்,காபூல் நகரின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று வயதான பெல்ஜியன் மலினாய் ...
-
பொது அறிவு 1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...
-
https://www.t hehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece





