8 ஜூன், 2026

World Oceans Day June 8

  

டலின் அழைப்பு கேட்கிறோமா?

உலகப் பெருங்கடல்கள் தினம் — ஜூன் 8, 2026 

71%

பூமியின் பரப்பில் கடல்

97%

உலகின் தண்ணீரில் கடல் நீர்

50%

ஆக்சிஜன் உற்பத்தி கடலில்

 

1. முன்னுரை

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 8 அன்று உலகம் முழுவதும் “உலகப் பெருங்கடல்கள் தினம்” சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பூமி உச்சி மாநாட்டில் கனடா முதலில் இந்த தினத்தை கொண்டாட முன்மொழிந்தது. பின்னர் 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இதனை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. கடல் என்பது வெறும் நீர்வெளி மட்டுமல்ல — அது உயிர்களைத் தாங்கும் தாய், காலநிலையைக் கட்டுப்படுத்தும் கவசம், மனிதகுலத்தின் அடிப்படை உயிர்வாழ் மூலம்.

2. கடலின் முக்கியத்துவம்

பூமியின் மேற்பரப்பில் சுமார் 71 சதவீதம் கடலால் ஆனது. உலகில் உள்ள மொத்த தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீராகும். அட்லாண்டிக், பசிபிக், இந்தியன், ஆர்க்டிக், அண்டார்டிக் என ஐந்து பெருங்கடல்கள் உலகைச் சூழ்ந்துள்ளன.

கடல் என்பது உயிரினங்களின் மிகப்பெரிய இல்லம். பவளப்பாறைகள், ஆழ்கடல் மீன்கள், திமிங்கலங்கள், டால்பின்கள் என 2.5 லட்சத்திற்கும் மேலான இனங்கள் கடலில் வாழ்கின்றன. கடலில் வாழும் தாவரங்களான ஃபைட்டோபிளாங்க்டன்கள் உலகின் மொத்த ஆக்சிஜனில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன — அதாவது நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு இரண்டு மூச்சிலும் ஒன்று கடலில் இருந்து வருகிறது.

“கடலில் வாழும் தாவரங்களான ஃபைட்டோபிளாங்க்டன்கள் உலகின் மொத்த ஆக்சிஜனில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு இரண்டு மூச்சிலும் ஒன்று கடலிடமிருந்து வருகிறது.”

 

3. காலநிலை மாற்றமும், கடலும்

கடல் உலகின் மிகப்பெரிய கார்பன் உறிஞ்சி ஆகும். மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் சுமார் 30 சதவீதத்தைக் கடல் உறிஞ்சிக்கொள்கிறது. மேலும் வெப்பசக்தியில் 90 சதவீதத்தைக் கடல் தன்னுள் சேமித்து வைத்து, நிலப்பகுதிகள் அதிகமாக வெப்பமடைவதைத் தடுக்கிறது. இந்தச் சேவைகள் இல்லாமல் இருந்திருந்தால் பூமி இன்று கடுமையான வெப்பத்தில் வெந்துபோயிருக்கும்.

ஆனால், தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை, காடழிப்பு என்று மனிதச் செயல்கள் காரணமாக ,கடல் நீரின் வெப்பநிலை உயர்கிறது. கடல் நீர் அமிலமாகிறது. இது பவளப்பாறைகளை அழிக்கிறது, கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் கடல் மட்டம் சுமார் 3.6 மில்லிமீட்டர் உயர்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

4. கடல் மாசுபாடு — மனிதனின் மிகப்பெரிய பாவம்

இன்று கடல் மாசுபாடு பேரழிவாக உருவெடுத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 8 மில்லியன் டன்னுக்கும் மேலான பிளாஸ்டிக், கடலில் கலக்கிறது. இந்த பிளாஸ்டிக்குகள் மீன்களால் உணவாக உட்கொள்ளப்பட்டு, உணவுச் சங்கிலி வழியாக , இறுதியில் மனித உடலுக்கே திரும்புகிறது.

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் “கடல் குப்பைத் தீவுகள்” உருவாகியுள்ளன. பசிபிக் பெருங்கடலில் இப்படிப்பட்ட ஒரு குப்பைத் திட்டு இந்தியாவின் மூன்று மடங்கு பரப்பளவைத் தாண்டியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

5. மீன்பிடித் தொழிலும் , கடல் உயிரினங்களும்

உலகின் 300 கோடிக்கும் மேலான மனிதர்கள் தங்களின் அன்றாட புரதத் தேவைக்கு , கடலை நம்பியுள்ளனர். இந்தியாவில் மட்டுமே சுமார் 1.5 கோடி மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிக மீன்பிடிப்பு (Overfishing) காரணமாக கடல் மீன் இனங்கள் வேகமாகக் குறைநதுவருகின்றன.

சட்டவிரோத மீன்பிடிப்பு, வலைகளால் பவளப்பாறை அழிப்பு, ஆழ்கடல் வெடிப்புகள் என்று கடல் உயிர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றன. நீலத் திமிங்கலம், கடல் ஆமை, சுறாமீன் போன்ற பல இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

6. நாம் என்ன செய்யலாம்?

கடலைக் காப்பாற்றுவது அரசின் மட்டும் கடமையல்ல — ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிப்பது, கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்பது, நீரோடைகளில் குப்பை போடாமல் இருப்பது, கடல் உற்பத்திகளை பொறுப்புடன் நுகர்வது — இவை சிறிய செயல்கள் ; ஆனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இன்றைய உலக அரங்கில் கடல் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்த பல நாடுகள் முயலுகின்றன. 2030-க்குள் உலகின் 30 சதவீதம் கடலை பாதுகாக்கப்பட்ட  பகுதியாக மாற்றும் “30x30” இலக்கை நோக்கி சர்வதேச சமூகம் பணியாற்றி வருகிறது.

7. முடிவுரை

கடல் இல்லாமல் மனிதன் இல்லை. கடல் மட்டுமல்ல, நாமும் கூட இயற்கையின் ஒரு பகுதி என்பதை உணரும் நாளே உலகப் பெருங்கடல்கள் தினம். அந்த நீலப்பெருங்கடல் நமக்கு தெய்வமாய், தாயாய், தோழனாய் நின்று நம்மைக் காக்கிறது. நாமும் அதனை அன்போடு காப்போம். ஜூன் 8 ஒரு நினைவூட்டல் மட்டுமல்ல — அது ஓர் உறுதிமொழி.

உலகப் பெருங்கடல்கள் தினம் | ஜூன் 8, 2026 | World Ocean Day

7 ஜூன், 2026

WORLD BRAIN TUMOR DAY -June 8

உலக மூளைக்கட்டி தினம் 2026

ஜூன் 8, 2026 | உலக சுகாதார நிறுவனம் (WHO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில்  

700+

வகைகள் (WHO பட்டியல்)

3 லட்சம்+

ஆண்டுதோறும் புதிய நோயாளிகள்

2000-ல்

German Brain Tumor Assoc. நிறுவிய ஆண்டு

  

1. நோய் பற்றிய விளக்கம்

மூளைக் கட்டி (Brain Tumor) என்பது மூளையில் அல்லது அதனைச் சுற்றியுள்ள திசுக்களில் அசாதாரணச் செல்கள், கட்டுப்பாடு இல்லாமல் வளர்வதால் ஏற்படும் ஒரு மருத்துவ நிலையாகும். WHO மூளைக் கட்டிகளை Grade I முதல் Grade IV வரை நான்கு நிலைகளில் வகைப்படுத்துகிறது.

Grade I, II கட்டிகள் மெதுவாக வளரும் தன்மையுடையவை (Benign); Grade III, IV கட்டிகள் விரைவாகப் பரவும் தீய தன்மையுடையவை (Malignant). Glioblastoma (GBM) என்பது Grade IV ஆக்கிரமிப்புக் கட்டி வகை. Meningioma, Astrocytoma, Medulloblastoma ஆகியவை மற்ற முக்கிய வகைகளாகும்.

 

2. காரணங்கள் — WHO தரவுகளின்படி

மூளைக் கட்டிக்கான துல்லியமான காரணம் இன்றும் முழுமையாக கண்டறியப்படவில்லை. WHO ஆராய்சிகள் சில முக்கிய ஆபத்துக் காரணிகளை (Risk Factors) அடையாளம் காட்டுகின்றன:

1.       மரபணு மாற்றங்கள்: Li-Fraumeni Syndrome,Neurofibromatosis போன்ற மரபணுக் குறைபாடுகள் மூளைக் கட்டி வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

2.       அயனியாக்கும் கதிர்வீச்சு: தலை மற்றும் கழுத்துப் பகுதிக்கு முன்னர் எடுத்துக்கொண்ட கதிர்வீச்சுச் சிகிச்சை (Radiotherapy) எதிர்காலத்தில் கட்டி வரும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று WHO தெளிவுபடுத்தியுள்ளது.

3.       வயது மற்றும் பாலினம்: சில கட்டி வகைகள் குழந்தைகளிடம் மற்றும் 65+ வயதினரிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. பெண்களுக்கு Meningioma வகை சற்று அதிகமாக காணப்படுகிறது.

4.       நோயெதிர்ப்பு மண்டல பலவீனம்: HIV/AIDS நோயாளிகள் அல்லது உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயெதிர்ப்பு மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு இந்நோயின் வாய்ப்பு கூடுதல்.

 

3. அறிகுறிகள் — கவனிக்க வேண்டியவை

மூளைக் கட்டியின் அறிகுறிகள் கட்டியின் இடம் மற்றும் வளர்ச்சி வேகத்தைப் பொறுத்து மாறுபடும். பின்வரும் அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்:

          காலையில் எழும்போது அதிகமாக இருக்கும் தலைவலி; தும்மல் / குனியும்போது மோசமாகும் தலைவலி

          திடீர் வலிப்பு (Seizures) — முன்பு வலிப்பு வந்ததில்லை என்பவர்களுக்கும் வரலாம்

          கண் பார்வை மங்குதல், இரட்டைப் பார்வை, அல்லது கண்பார்வை திடீரென பாதிப்பு

          பேசும் திறன் குறைதல், பேசுவதற்கு சொல் கிடைக்காமல் இருப்பது, மற்றவர் சொல்வது புரியாமல் போவது

          குமட்டல் மற்றும் வாந்தி — குறிப்பாக, காலையில் தலைவலியுடன் சேர்ந்து வருவது

          நினைவாற்றல் குறைபாடு, குழப்பம், மனநிலை மாற்றங்கள், திடீரென ஏற்படுவது

          உடலின் ஒரு பக்கம் மட்டும் கை அல்லது கால் பலவீனம், மரத்துப்போவது

          நடக்கும்போது சமநிலை இழப்பு, அடிக்கடி தடுமாறுவது

 

4. கண்டறிதல் — நவீன மருத்துவ முறைகள்

5.       MRI: Gadolinium Contrast MRI மூளம் கட்டியின் இடம், அளவு, வகை துல்லியமாக தெரியும். மூளைக் கட்டி கண்டறிவதற்கான தங்க நிலைச் சோதனை (Gold Standard).

6.       CT Scan: அவசரகால நிலையில் விரைவாக கண்டறியப் பயன்படுகிறது; இரத்தப்போக்கு மற்றும் முன்னேற்பாட்டு மதிப்பீட்டிற்கும் உதவுகிறது.

7.       Biopsy (திசு சோதனை): கட்டியின் துல்லியமான வகை மற்றும் Grade தீர்மானிக்க, குறுகிய அறுவைச் சிகிச்சை மூலம் திசு எடுத்து, பரிசோதனை செய்யப்படுகிறது.

8.       PET Scan: கட்டி உயிரோட்டமான நிலையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய; சிகிச்சைக்குப் பின் மீண்டும் வளர்கிறதா என்று சரிபார்க்க.

 

5. சிகிச்சை முறைகள்

மூளைக் கட்டி சிகிச்சை, கட்டியின் வகை, இடம், Grade மற்றும் நோயாளியின் உடல் நிலையைப் பொறுத்து பலவகையான முறைகளை உள்ளடக்கியிருக்கும்:

அ. அறுவை சிகிச்சை (Surgery / Craniotomy)

கட்டியை முழுவதுமாக அல்லது பகுதியாக அகற்றுவது முதன்மையான சிகிச்சை முறை. அறுவைக்கு பிறகு மிகுதியாக உள்ள கட்டி செல்களையே அழிக்க Radiotherapy மற்றும் Chemotherapy சேர்த்து வழங்கப்படுகிறது.

ஆ. கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy / Gamma Knife)

அதிக ஆற்றல் கதிர்களை கட்டி செல்களை அழிக்க பயன்படுத்துகிறது. Stereotactic Radiosurgery (Gamma Knife / CyberKnife) — மிகவும் நுண்மமான நவீன தொழில்நுட்பம்.

இ. கீமோதெரபி (Chemotherapy)

Temozolomide (TMZ) மருந்து GBM சிகிச்சையில் WHO நிர்ணயித்த முதன்மை மருந்தாகும். வாய் மூலம் அல்லது நரம்பு வழி வழங்கப்படுகிறது.

ஈ. ஆதரவு சிகிச்சை (Palliative Care)

WHO-யின் Palliative Care வழிகாட்டுதல் படி, வலி நிவாரணம், உளவியல் ஆதரவு, குடும்பத்தினருக்கு வழிகாட்டுதல் — இவை அனைத்தும் சிகிச்சையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். 

6. விழிப்புணர்வுக் கருத்துகள்

          அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் — உடனடியாக நரம்பியல் நிபுணரை (Neurologist) அணுகுங்கள்

          MRI / CT Scan பரிந்துரைக்கப்பட்டால் தாமதிக்காமல் மேற்கொள்ளுங்கள்

          மூளைக் கட்டி குணப்பட்டு வராது என்ற தவறான நம்பிக்கையை விடுங்கள் — சரியான சிகிச்சையில் குணமடையலாம்

          குடும்ப வரலாற்றில் இந்நோய் இருந்தால் — மரபணு ஆலோசனை (Genetic Counselling) பெறுங்கள்

          இந்தியாவில் AIIMS, NIMHANS, Apollo, CMC Vellore ஆகியன சிறந்த நரம்பியல் அறுவை மருத்துவமனைகள்

          Brain Tumor Foundation of India (BTFI) இல் ஆதரவு மற்றும் தகவல் பெறலாம்

 

 7. ஆதரவு — நோயாளி மற்றும் குடும்பத்தினருக்கு

மூளைக் கட்டி சிகிச்சை பெறும் நோயாளிக்கு மட்டுமல்ல, குடும்பத்தினருக்கும் இந்த நோய் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். WHO-யின் Palliative Care வழிகாட்டுதல் படி:

          Psycho-Oncologist உதவியுடன் நோயாளியும், குடும்பத்தினரும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்

          Neuro-Rehabilitation மூலம் பேசும் திறன், நடக்கும் திறனை மீட்டெடுக்க உதவுகிறது

          Brain Tumor Support Groups மூலம் நோயாளிகளுடன் பேசுவது மனவலிமை தரும்

 

மூளைக் கட்டி என்பது ஒரு நோயல்ல — அது ஒரு சவால். விழிப்புணர்வு, விரைவான கண்டறிதல், சரியான சிகிச்சை — இந்த மூன்றும் இந்த சவாலை வெல்ல உதவும்!

www.myilsam.blogspot.com | ஜூன் 2026

6 ஜூன், 2026

World Food Safety Day - June 7

 

உலக உணவுப் பாதுகாப்பு தினம் 2026

World Food Safety Day | ஜூன் 7, 2026

WHO · FAO · UN


🏷 Slogan of the year: "சுமையிலிருந்து, தீர்வுகளுக்கு – எங்கும் பாதுகாப்பான உணவு"

"From burden to solutions – safe food everywhere"

🌿 முன்னுரை

உணவு என்பது, வெறும் பசியைத் தணிக்கும் பொருள் மட்டுமல்ல — அது உயிர்வாழ்வின் அடிப்படை. ஆனால், நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா என்ற கேள்வி இன்றும் கோடிக்கணக்கான மக்களிடம் பதிலற்று நிற்கிறது. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தவே, WHO மற்றும் FAO இணைந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 7 அன்று உலக உணவுப் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடுகின்றன.

2019-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படும் இந்த தினம், உணவுப் பாதுகாப்பு என்பது எல்லாரின் பொறுப்பு என்ற செய்தியை உலகெங்கும் பரப்புகிறது.

🏷 2026-ஆம் ஆண்டு முழக்கமும், கருப்பொருளும்

இந்த ஆண்டின் கருப்பொருள் ஒரு முக்கியமான செய்தியை முன்வைக்கிறது: தரவும், அறிவியலும்தான் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் சரியான கருவிகள். நோய்களின் பாரம், மரண எண்ணிக்கை, பொருளாதார இழப்பு குறித்த நம்பகமான தகவல்களைச் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் சிக்கனமான தீர்வுகளை மேற்கொள்வதே இந்தக் கருப்பொருளின் உள்ளம்சம்.

இந்தாண்டு, WHO தனது புதிய Food borne Disease Estimates 2026 அறிக்கையை வெளியிட உள்ளது. இதில் 2000–2021 காலகட்டத்திலான தேசிய அளவிலான தகவல்கள் முதல்முறையாக இடம்பெறும். ஆர்சனிக், காட்மியம், ஈயம், மீத்தைல்மெர்க்குரி போன்ற கனரக உலோகங்களின் ஆபத்துகளும் ஆய்வு செய்யப்படும்.

⚖️ இந்தத் தினத்தின் முக்கியத்துவம்

உலக அளவில் உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்: 

60 கோடி

ஆண்டுதோறும் உணவு நோயால் பாதிக்கப்படுவோர்

4.2 லட்சம்

உணவுப் பாதுகாப்பின்மையால் உயிரிழப்போர்

200+

பாதுகாப்பற்ற உணவால் வரக்கூடிய நோய்கள்

 Food Safety என்பதும், Food Security என்பதும் வேறு. Food Security என்பது, போதுமான உணவு கிடைக்கும்படி செய்வது; Food Safety என்பது அந்த உணவை உண்ணும்போது தீங்கு விளைவிக்காமல் இருக்கும்படி செய்வது.

📢 விழிப்புணர்வு நடவடிக்கைகள்

WHO-வின் 'Five Keys to Safer Food' வழிகாட்டுதல்:

1. சுத்தமாக இருங்கள் சமைக்கும் முன்பும் உண்பதற்கு முன்பும் கைகளை நன்றாக சோப்பால் கழுவுங்கள்.

2. பச்சை மற்றும் சமைத்த உணவைப் பிரித்து வைக்கவும்உணவுகளுக்கு இடையிலான மாசுபடுதலைத் (cross-contamination) தவிர்க்கவும்.

3. நன்கு சமைக்கவும் உணவை, சரியான வெப்பநிலையில் முழுமையாகச் சமைக்கவும் (குறைந்தது 70°C).

4. பாதுகாப்பான வெப்பநிலையில் சேமிக்கவும்குளிர்சாதனப் பெட்டியில் 5°C-க்கும் குறைவான வெப்பநிலையில் வையுங்கள்.

5. பாதுகாப்பான நீரும் மூலப்பொருட்களும்குடிக்க, சுத்தமான நீரை மட்டுமே பயன்படுத்தவும்.

⚠️ பாதுகாப்பற்ற உணவால் விளையும் தீமைகள்

பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், நச்சு இரசாயனங்கள் கலந்த உணவை உட்கொண்டால்: 

🤒 உடல்நல பாதிப்பு

வாந்தி, வயிற்றுப்போக்கு முதல் சிறுநீரக செயலிழப்பு, மரணம் வரை ஏற்படலாம்.

👶 குழந்தைகளுக்கு அதிக ஆபத்து

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 40% உணவு நோய் மூலம் மரணங்கள் நிகழ்கின்றன.

💰 பொருளாதார இழப்பு

சுகாதாரச் செலவு, தொழிலாளர் இழப்பு என பல நூறு கோடி ரூபாய்  இழப்பு.

🧪 கனரக உலோக நச்சுகள்

ஆர்சனிக், ஈயம் போன்றவை புற்றுநோய், மூளை வளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

🌾 விவசாய & ஏற்றுமதி இழப்பு

சர்வதேச தரத்தைப் பூர்த்தி செய்யாத நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அடைக்கப்படும்.

🏙 சமூக நம்பிக்கை இழப்பு

உணவு மாசுபாடு தொடர்பான வழக்குகள் அரசு நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும்.

 🇮🇳 இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு நிலை

இந்தியாவில் FSSAI (Food Safety and Standards Authority of India) உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கிறது. தெருவோர உணவுக் கலாச்சாரம் செழிக்கும் நம் நாட்டில், சரியான சுகாதாரம் இல்லாத சமையல், அசுத்த நீர், நம்பகமற்ற சேமிப்பு முறை போன்றவை இன்னும் சவாலாகவே உள்ளன.

கிராமப்புற பகுதிகளில், குடிநீர் சுத்தம், குளிர்சாதன வசதியின்மை, அறிவியல் சார் சமையல் அறிவின்மை ஆகியவை உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன. இந்தப் பின்னணியில், உலக உணவுப் பாதுகாப்பு தினம் இந்தியர்களுக்கும் உரிய விழிப்புணர்வைத் தருகிறது. 

🌱 பாதுகாப்பான உணவு, ஆரோக்கியமான வாழ்வு!

உணவுப் பாதுகாப்பு நம் பொறுப்பு | ஜூன் 7 — உலக உணவுப் பாதுகாப்பு தினம்

தகவல் மூலம்: www.who.int | www.fao.org

4 ஜூன், 2026

World Environment Day -உலக சுற்றுச்சூழல் தினம் 2026

 

உலக சுற்றுச்சூழல் தினம்  2026


"இயற்கையால் உத்வேகம்காலநிலைக்காக, நம் எதிர்காலத்திற்காக"


ஏன் இந்தத் தினம் ?

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மனித இனத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை மீண்டும் நினைவூட்டும் ஒரு புனிதமான நாளாகும். 1972-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இந்நாள் அறிவிக்கப்பட்டு, 1973-ஆம் ஆண்டு முதல் "ஒரே ஒரு பூமி" என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தனிமனிதர்கள், பள்ளிகள், அரசுகள், சமூகங்களை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத்  தூண்டும் உலகின் மிகப் பெரிய தளமாக விளங்குகிறது.


2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்

இந்த ஆண்டின் கருப்பொருள்"Inspired by Nature. For Climate. For Our Future." (இயற்கையால் உத்வேகம்காலநிலைக்காக, நம் எதிர்காலத்திற்காக) என்பதாகும். இதன் பிரச்சாரச் செய்தி #NowForClimate என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கருப்பொருள், இயற்கை என்பது விருப்பமான ஒன்றல்லஅது காலநிலை நெகிழ்ச்சிக்கும் நம் எதிர்காலத்திற்கும் மையமானது என்பதை வலியுறுத்துகிறது.

காலநிலை நடவடிக்கை என்பது வெறும் கார்பன் உமிழ்வைக் குறைப்பது மட்டுமல்லநம் பொருளாதாரங்களை இயக்கும் அமைப்புகளை மறுசிந்தனை செய்வதும், காலநிலையுடனான நம் உறவைச் சீரமைப்பதும் என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.


தொடர்ச்சியான மூன்று தூண்கள்

இந்தக் கருப்பொருள் மூன்று இணைந்த தூண்களில் செயல்படுகிறது
1.காடுகள் கார்பனை உறிஞ்சுகின்றன; 2.சதுப்பு நிலங்கள் கடலோரப் புயல்களைத் தடுக்கின்றன; 3.கண்டல் காடுகள்(Mangrove Forests) கரையோரங்களைப் பாதுகாக்கின்றன; மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் கார்பன் சுழற்சியை ஒழுங்குபடுத்துகின்றன. இந்தக் கருப்பொருள் இயற்கையை ஒரு வளமாக அல்ல, ஒரு கூட்டாளியாக மறுவரையறை செய்கிறது.



விருந்தினர் நாடுஅஜர்பைஜான்

2026-ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் விருந்தினர் நாடு அஜர்பைஜான் குடியரசு; உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வு பாகு நகரில் நடைபெறும். வரலாற்று பட்டுப் பாதையின்  (SILK ROUTE) குறுக்குவெட்டில் அமைந்துள்ள அஜர்பைஜான், இரண்டு முக்கிய காலநிலை மண்டலங்களையும்துணை வெப்பமண்டல வனங்கள் முதல் ஆல்பைன் சூழலியல் அமைப்புகள் வரை — 8 வேறுபட்ட காலநிலை வகைகளையும் கொண்ட இயற்கை வளமிக்க நாடாகும். அஜர்பைஜான் 1990 அளவுகளிருந்து 2035-ஆம் ஆண்டிற்குள் 40% உமிழ்வைக் குறைக்க உறுதிமொழி அளித்துள்ளது.



காலநிலை நெருக்கடியின் அவசரம்

இந்த பூமி வாதிடுவதில்லை; பேரம் பேசுவதில்லை. அது சமிக்ஞைகளை அனுப்புகிறதுஉயரும் கடல்மட்டங்கள், வீரியமான காட்டுத்தீகள், வெப்ப அலைகள், உருகும் பனிப்பாறைகள் என்பனவற்றின் மூலம். 1.5°C என்பது எல்லை என்று நாம் கூறினோம்அதை நாம் தாண்டி வருகிறோம்.

உலக வளிமண்டல அமைப்பு (WMO) 2024- உலகின் மிக வெப்பமான ஆண்டாக உறுதிப்படுத்தியுள்ளது; உலகளாவிய சராசரி வெப்பநிலை பாரிஸ் ஒப்பந்தம் நிர்ணயித்த 1.5°C என்ற வரம்பைக் கடந்தது. இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினம் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு அழைப்பாக விளங்குகிறது.



நம்பிக்கையின் ஒளிர்வு

ஆனால் இந்த இரைச்சலுக்குக் கீழே, மற்றொரு சமிக்ஞை மேலெழுகிறது: கூரைகளின் மீது சூரிய மின்னிணைப்பு விரிகிறது; அடிவானில் காற்றாலைகள் நிரைநிரையாக நிற்கின்றன; நகரங்கள் மனிதர்களுக்காக மறுவடிவமைக்கப்படுகின்றன; காடுகள் மீண்டும் வளர்க்கப்படுகின்றன. இவை நம்பிக்கையின் அடையாளங்கள்.


நாம் செய்ய வேண்டியவை

இந்த உலக சுற்றுச்சூழல் தினம் வெறும் கொண்டாட்டமல்லஅது ஒரு சத்தியப்பிரமாணம். நாம் ஒவ்வொருவரும்:

  • மரங்கள் நட வேண்டும்
  • பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஆதரிக்க வேண்டும்
  • இளைஞர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

இவற்றை அறிவோம்

இந்த
தினம் தனிமனிதர்களை நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க ஊக்கப்படுத்துகிறது; சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது; புல்வெளி, குரல்களையும் முன்னணி சமூகங்களையும் வலுப்படுத்துகிறது. இயற்கை நம் ஆசிரியர், நம் கூட்டாளி, நம் அடைக்கலம். அதை நாம் காக்கும் போது, நாமும் காக்கப்படுவோம்.

#NowForClimate இது நேரம். இது நம் பொறுப்பு. இது நம் எதிர்காலம்.