24 மார்ச், 2022

உலக காசநோய் தினம் (மார்ச் 24)

     உலகில் வேகமாக பரவும் நோய்களில் காசநோய் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

     ஒவ்வொரு நாளும், 4000 பேர் காச நோயினால் இறந்துவிடுகிறார்கள். மனிதனின் நகம், தலைமுடி தவிர மற்ற பாகங்களில் இந்நோயின் தாக்கம் உள்ளது. குறிப்பாக, நுரையீரல் புற்றுநோயே, பலரின் இறப்புக்குக் காரணமாகிறது.

    சிகிச்சை நல்ல பலன் அளிக்கும் என்பதனைப் போல் சிகிச்சை இன்மை ஆபத்தான விளைவுகளையும் அளிக்கும் என்பதனை உணர்த்துவதும் ‘உலகக் காச நோய் தினத்தின்’ நோக்கம் ஆகும். 

    இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெயர் "பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ்" என்பது ஆகும். உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

 உலக காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால்   அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாள்களில் ஒன்றாகும். உலகச் சுகாதார நாள், உலகக் குருதிக் கொடையாளர் நாள், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா நாள், உலகப் புகையிலை எதிர்ப்பு நாள், உலகக் கல்லீரல் அழற்சி நாள், உலக எயிட்சு நாள் ஆகியவை ஆகும். 

 காச நோய் அறிகுறிகள்: 

1. இரண்டு வாரத்திற்கு மேல், இருமல், காய்ச்சல்
2. சளியுடன் கூடிய இருமல்
3. இருமும்போது சளியுடன் ரத்தம் வெளியேறுதல்
4. பசியின்மை
5. எடை குறைதல்
6. இரவில் வியர்வை 

 சிகிச்சை:  'மான்டோ’ பரிசோதனை மூலம் காச நோய் கிருமித் தொற்றைக் கண்டறியலாம். பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தால் அவர்களுக்குக் காச நோய் உள்ளது என்று அர்த்தம். இவர்களுக்கு, மேலே சொன்ன அறிகுறி இருந்தால், உடனடியாகச் சிகிச்சை எடுக்க வேண்டும். முறையான, சரியான நேரத்தில் பரிசோதனை, 6 மாதத் தொடர் சிகிச்சை, சத்தான உணவுகள் மூலம், இந்நோயிலிருந்து மீளலாம்.

காசநோயாளிகள் தவிர்க்க வேண்டிய பொருள்கள் 

காசநோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

காச நோய் - செய்யவேண்டியதும் மற்றும் செய்யக்கூடாததும் 

செய்யவேண்டியவை

  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் சளி பரிசோதனை செய்யவேண்டும். இந்த பரிசோதனை இலவசமாக அரசு சளி நுண்ணுயிர் மையத்தில் செய்யப்படும்.
  • அனைத்து மருந்துகளையும் தொடர்ந்து முழுகால அளவுகளுக்கு எடுக்கவேண்டும்.
  • டி.பி. குணப்படுத்தக்கூடியது என்பதை புரிந்து கொள்ளவும்.
  • தும்மல் மற்றும் இருமல் ஏற்படும் பொழுது கைக்குட்டையை உபயோகப்படுத்தவும்.

செய்யக்கூடாதவை

  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவ உதவியை தவிர்க்க கூடாது.
  • டி.பி.-யை கண்டுபிடிக்க எக்ஸ்ரேயை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது.
  • மருத்துவர் அனுமதியில்லாமல் மருந்துகளை நிறுத்தக்கூடாது.
  • டி.பி. நோயாளிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது.
  • கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...