21 டிசம்பர், 2021

ரேடியம் கண்டறியப்பட்ட நாள்

         அறிவியலுக்குக் கிடைத்த ஓர் அற்புதத் தனிமம்


மேரி கியூரி

      ரேடியம் என்பது கதிர்வீச்சுள்ள ஒரு தனிமம். போலந்து நாட்டைச் சேர்ந்த பிரெஞ்சு அறிவியலாளரான மேரி கியூரி, அவரது கணவர், பியரி கியூரி இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்ட் தாதுவை, தொடர்ந்து ஆய்வு செய்தார்கள். 

பியரி கியூரி

     பிட்ச்பிளென்ட் நிறைய தனிமங்களைக் கொண்ட ஒரு தனிமமாகும். போலோனியத்தைக் கண்டுபிடிப்பது சிறிது சுலபமாக இருந்தது. ஏனெனில் வேதியியல் ரீதியாக அது பிஸ்மத்தை ஒத்திருந்தது. மேலும் பிஸ்மத்தை ஒத்த தனிமமாக பிட்ச்பிளென்டில் இது மட்டுமே இருந்தது. 

      ஆனால் ரேடியத்தைக் கண்டுபிடிப்பதோ கடினமாக இருந்தது. ஏனெனில் அது பேரியத்தை ஒத்திருந்தது. மேலும் பிட்ச்பிளென்டில் பேரியமே இருக்கிறது. இறுதியாக 1902இல் ஒரு டன் பிட்ச்பிளென்டில் இருந்து 0.1 கிராம் ரேடியம் குளோரைடைப் பிரித்தெடுத்தனர். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு தீவிரக் கதிர்வீச்சு கொண்ட ரேடியம் என்னும் புதிய மூலகத்தை,1898 டிசம்பர் 21 ஆம் தேதி, கண்டுபிடித்தார்கள்.

      இந்த அரிய கண்டு பிடிப்புக்காக, மேரி கியூரி, பியரி கியூரி, இருவருக்கும் ரசாயன விஞ்ஞானத்திற்கு 1903 ல் நோபல் பரிசு கிடைத்தது.மேரி கியூரிதான் நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்ணாவார். கியூரி தம்பதிகள், வேலைப்பளு அதிகம் இருந்ததால், நோபெல் பரிசை பெற்றுக்கொள்ள, ஸ்டாக்ஹோம் செல்லவில்லை. நோபெல் பரிசு பெறுபவர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்பதால் இருவரும் 1905 இல் ஸ்டாக்ஹோமிற்குச் சென்றனர். 

நோபெல் பரிசு

        ஜூலை 4,1934 இல் மேரி பச்சியில் உள்ள சன்செல்லிமொஸ் சானிடோரியத்தில் பல்லாண்டுகள் கதிரியக்க வெளிப்பாடோடு பழகியதால், இரத்த சோகையால் உயிரிழந்தார். அவர் பையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் கொண்ட சோதனைக் குழாய்களை வைத்திருந்திருக்கிறார். மேலும் அவைகளை தனது மேசையிலும் வைத்திருந்திருக்கிறார். போரின் போது மருத்துவமனைகளில் ஒரு கதிரியக்கராக பணியாற்றியபோது ஒழுங்கான உபகரணங்கள் அணிந்திருக்கவில்லை. அதனாலும் அவருக்கு ஆபத்து நேர்ந்தது.

     மேரி கியூரி, தனது கணவர் பியரியுடன் ச்கேயுக்ஸில் புதைக்கப்பட்டார். அறுபது வருடங்களுக்கு பிறகு, 1995 ஆம் ஆண்டில், தங்கள் சாதனைகளின் நினைவாக, பாரிஸ் பாந்தியனுக்கு இருவரின் கல்லறைகளும் மாற்றப்பட்டன. இதுவரை இப்படி மரியாதை வழங்கப்பட்ட ஒரே பெண் மேரி கியூரிதான்.

      அவரது,1890 காலத்து ஆவணங்கள், கையாள மிகவும் ஆபத்தானவையாக, இன்றும் கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகள் கதிரியக்க வெளிப்பாடு கொண்டிருக்கின்றன. அவரது சமையல் புத்தகம்கூட, அதிக கதிரியக்க வெளிப்பாடு கொண்டதாகும்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...