1 மார்ச், 2012


1. உலக அளவில், ஏழைக் குழந்தைகளின் நிலை, கிராமங்களை விட நகரங்களில்  கவலையளிக்கும் வகையில் உள்ளதாக ஐ.நா. மன்றத்தின், குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
2. மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிடவில்லை; அதிபர் கேட்டுக் கொண்டதால் மத்தியஸ்தம் செய்யும் பணியை மட்டுமே செய்கிறோம் என்று இந்தியா விளக்கமளித்துள்ளது.
3. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்குமாறு, இந்தியாவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
4. பிரம்மபுத்திரா நதி திடீரென வற்றியதால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில், பொருளாதார ரீதியான பிரச்சினைகளும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.கே. கிரிமே கூறியுள்ளார்.
5. மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதை அடுத்து, நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகள் அதிகரிக்க உள்ளன.
6. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவது உறுதி என்று கேரள சட்டப்பேரவையின் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. 
7. வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில், செமஸ்டர் அப்ராட் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு மாநில உயர் கல்விக் கவுன்சில் அறிவித்துள்ளது.
8. உலக ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்” 24 நாடுகளில் எடுத்த கணக்கெடுப்பில், உலகில் மகிழ்ச்சியாக வாழும் மக்களில்,இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
 9. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 27 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 13 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
 10.ஆசிய கோப்பைக்கான இந்திய ஒருநாள் மட்டைப்பந்து அணியில், மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.


Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...