9 நவம்பர், 2021

சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம் (International Guinness World Records Day)

 



1.கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார்.

2. உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். 

3.முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது. 

4.1998-க்குப் பிறகு புத்தகத்தின் தலைப்பில் 'உலகச் சாதனை' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, 'கின்னஸ் சாதனைப் புத்தகம்' என்ற பெயரில் வெளியாகி வருகிறது.

5.இது ஆண்டுதோறும் வெளியாகும் தொகுப்பு நூல். Click Here

6.உலகில் நிகழ்த்தப்படும் இயற்கைச் சாதனைகள், மனிதச் சாதனைகள் இரண்டும் இதில் தொகுக்கப்படுகின்றன. 

7.இயற்கைச் சாதனைகளை எல்லோரும் அறிந்துகொள்ள விரும்பினாலும், அது அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

8.மனிதச் சாதனைகள் என்ற பெயரில், வேடிக்கையான, விநோதமான, ஒரு செயலைச் செய்வதால் குறிப்பிட்ட எந்தப் பயனும் கிடைக்காவிட்டாலும் கூட, பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

9.கின்னஸ் புத்தகத்தில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்ற பலருடைய ஆசைதான், இதற்கு அடிப்படைக் காரணம்.

10.இன்றைக்கு உலகச் சாதனைகளைப் பட்டியலிடும் மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக, கின்னஸ் சாதனை அமைப்பு வளர்ந்திருக்கிறது. 

11.புத்தகமாக மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடராகவும், அருங்காட்சியகமாகவும் பல்வேறு வடிவங்களுக்கு அது பரவலாகியுள்ளது.

12.இந்தப் புத்தகத்தில் சாதனைகளைச் சேர்ப்பதற்கு எனத் தனி விதிமுறைகள் இருக்கின்றன. அதிகாரப்பூர்வக் கின்னஸ் நடுவர்கள் முன்னிலையில்தான் புதிய சாதனையை நிகழ்த்தவோ, ஏற்கெனவே உள்ள சாதனையை முறியடிக்கவோ முடியும்.

  நாம் நிகழ்த்தும் சாதனைகள் நம் பெருமையை உயர்த்த மட்டுமல்லாமல், சமூகத்தை உயர்த்தக் கூடியதாக இருக்கட்டும்

தேசிய சட்டசேவைகள் தினம்

       


      ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1987- ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால்  சட்ட சேவைகள் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.   “அனைவருக்கும் நீதி” என்ற குறிக்கோளோடு உச்சநீதிமன்றம் 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இலவச சட்ட சேவையைத் துவங்கியது. இந்த தினமே சட்ட சேவைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு உறுதி செய்கிறது

     மாற்றுத்திறனாளிகள், பலவீனமானவர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உச்சநீதிமன்றம் விரும்பியது.

     இளம் வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகளையும், அதன் தொடர்பான சட்டங்களையும் தெரிந்துகொள்ள இத்தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

     இதன் மூலம் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்குத் தகுதியான சட்ட உதவி இலவசமாகக்  கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...