3 டிசம்பர், 2021

டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள்

 


      * இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாகக் கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாகப் போற்றப்பட்ட ‘குடியரசு தலைவர்’ பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்’ ஆவார். 

   * இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில், அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசுத் தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

    * ராஜேந்திர பிரசாத் -  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். எந்த அளவுக்கு என்றால் ஓர்ஆசிரியர் ,"இந்த விடைத்தாளை எழுதியவன் என்னை விடத் திறமைசாலி !"எனத் தேர்வுத்தாளில் குறிக்கிற அளவுக்கு. சட்டக்கல்லூரியில் தங்க பதக்கம் பெற்றார் ராஜேந்திர பிரசாத்.

     * காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நல்ல வருமானம் தந்த தன் வக்கீல் தொழிலைத் துறந்தார். தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக, முப்பத்தி எட்டு லட்சம் ரூபாய் திரட்டினார்.

    * மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1942 ல் “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார்.

    * அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார். எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என அரசு விதித்த தடையை மீறி, சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு தன் மகனை வெளியேற்றினார். காங்கிரசின் தலைவராகப் போஸிற்குப் பின் ,கிருபாளினிக்குப் பின் பதவியேற்றார்.

    * சட்ட வரைவுக்குழுவின் தலைவர் ஆக இருந்தார். இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் அவர் பதவி வகித்தது இன்றுவரை சாதனை. 

    ஜனவரி இருபத்தைந்து அவரின் உடன் பிறந்த சகோதரி இறந்து போனார் ,ஆனாலும் அடுத்த நாள் குடியரசு தினத்தன்று முறைப்படி கொடியேற்றி விட்டு அதற்கு அடுத்தத் தினமே போய் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அது தான் தேச ரத்னா ராஜேந்திர பிரசாத். 

    * இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை மே 13, 1962 ஆம் ஆண்டில்  வழங்கிக் கெளரவித்தது.


பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

       உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை, உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3 ஐ அனுசரிக்கின்றது.

      1981 ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

      மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசாங்கமும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

    இளமையில் கண்பார்வை இழந்த, கவிஞர் ஜான்மில்டன்  “இழந்த சொர்க்கம்” (https://www.britannica.com/topic/Paradise-Lost-epic-poem-by-Milton)  “மீண்ட சொர்க்கம்” எனும் புகழ் பெற்ற படைப்புகளை இயற்றினார். 

   கற்கும் திறனற்றவர் என்று பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனை (https://en.wikipedia.org/wiki/Thomas_Edison) ஊக்கப்படுத்தி அவருக்குக் கல்வியைக் கற்றுத்தந்து ஆய்வாளராக்கியதில் அவர் தாய் நான்சி எடிசனுக்குப் பங்குண்டு. மூளைவளர்ச்சித் திறனற்றவர் என்று முத்திரை குத்தப்பட்ட எடிசன், தன் மாற்றுத்திறனால் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார்.

     முன்னேறுபவர்கள் ஒருநாளும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதில்லை!அவர்கள் மூச்சுப்பிடித்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். 

    தடுமாறி விழுந்தவர்கள் களையும், தடம்மாறிச் சென்றவர்களையும் நேர்வழிப்படுத்தும் பேராசிரியர்களாக உலகப்புகழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்று பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங் ( https://www.hawking.org.uk/ ) இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் கற்று எல்லோரையும் போல் இயல்பாய் வாழ்ந்துகொண்டிருந்தபோது 21 வயதில் இயக்கு நரம்பணு நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள் செயலிழந்து வாய்பேசமுடியா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    கணினியைப் பயன்படுத்தி அவர் சொல்வதை மாணவர்கள் புரிந்துகொள்ளுமளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் குறையை அவர் துணிச்சலாக எதிர்கொண்டார். உடல்குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் கடும்முயற்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

    உலகின் சிறந்த இசைமேதையான லுடுவிக் வான் பீத்தோவன், 


பியானோ இசைக்கலைஞராகத் தொடக்கத்தில் அறியப்பட்டார். புகழ்பெற்ற இசையமைப்பாளராக அவர் உருவான காலத்தில் 26 ஆவது வயதில் செவித்திறனை முற்றிலும் இழந்தார். இழந்த செவித்திறன் குறித்து அவர் வருந்தினார், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது.

    அவரது நண்பர்கள் தந்த ஊக்கத்தின் உதவியால் அதிலிருந்து மீண்டு இசையில் மூழ்கினார். உலகப் புகழ்பெற்ற நைன்த் சிம்பனி, வயலின் நோட்ஸ்களை உருவாக்கினார். அவரது இறுதிஊர்வலத்தில் இருபதாயிரம் பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஒருதிறன் குறைந்தால் மாற்றுத் திறன் உள்ளுக்குள்ளிருந்து பீறிட்டெழுந்தே தீரும் என்பதற்குச் சான்று பீத்தோவன்.

     இதுபோன்று உடல் குறைபாட்டைக் கருதாது வாழ்க்கையை வென்றவர்கள் ஏராளம். பாரா ஒலிம்பிக் என்ற விளையாட்டுப்போட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போட்டியாகும்.

மாற்றுத்திறனாளர்கள் வகைப்பாடு  (இந்திய அளவில்)

1 . பார்வைக் குறைபாடுடையோர். 

2 . கை,கால் குறைபாடுடையோர். 

3 . செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர்

 4 . மனவளர்ச்சி குன்றியவர்கள். 

5 . தொழுநோய் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள். 

 என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர்.

      மாற்றுத்தினாளிகளைச் சமூகம் அங்கவீனர்கள் எனக் சுட்டிக் காட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

      இவ்வுலகில் மானிடராக பிறப்பதே அரியதாகும். அம்மானிடப்பிறப்பில் ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறையல்ல. ஒவ்வொருவரதும் ஊனமும் அங்கவீனமும் அவரது உடம்பில் தான் உண்டு. மனதிலே இல்லை என்பதை புரிந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதே நியதி.


Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...