எழுதப் படாத சட்டங்களைக் கொண்டு, தங்களது மரபுகளையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் ,உலகின் மிகச் சிறந்த மக்களாட்சி நாடுகளுள் சிறந்த நாடாகவும் இருக்கும் இங்கிலாந்தில் கலவரம்,வன்முறை, சூறையாடல், போன்ற செய்திகளைக் காணவும், கேட்கவும் மனம் வருந்துகிறது.சூரியன் மறையாத ஆட்சியைக் கொண்டிருந்த இந்நாடும் ,இந்நாட்டு மக்களும்,இன்று படும் வேதனையைச் சொல்லி மாளாது.பொது மக்கள் என்ன பாவம் செய்தனர்? ஒன்றுமறியா அப்பாவிகள் இவ்வாறு அல்லல் படுவது யாராலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று!
சோமாலிய நாட்டிலோ இன்னுமொரு கொடுமை!உணவின்றி தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மாண்டுபோகின்றனர்.மனிதத் தன்மை உள்ள எந்த ஒரு நாட்டவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.உணவு அளிக்க ஐ.நா அவையும் ,மற்ற நாடுகளும் தயாராக இருந்தாலும் அதை மக்களுக்கு அனுமதிக்கவோ, அதை அவர்கள் பெற்றுக்கொள்ளவோ. அந்நாட்டில் இருந்து செயல்படும் தீவிரவாதக்குழுக்களும்,இராணுவமும் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மக்கள் சமுதாயம் இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல இருப்பது, மனித சமுதாயம் மனிதத்தன்மையை இழந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது....
11 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 நம் விவரங்களை நாமே பதிவு செய்வோம் ( Self Enumeration) இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027...
-
அப்துல் கலாம் நினைவு நாள் ஒரு எளிய மனிதரின் உன்னத வாழ்க்கைப் பயணம் ராமேஸ்வரத்தில் ஒரு எளிய தொடக்கம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம்...
-
TNPSC குரூப் 1 தேர்வு 2026 அறிவிப்பு வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) ஜூன் 23, 2026 அன்று குரூப் 1 தேர்வு அ...
-
சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம். "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே...
-
ஹைட்ரஜன் ரயில் உலகில் இந்தியா நுழைந்தது சுத்தமான பயணத்தின் புதிய அத்தியாயம் இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு முக்கியமான மை...