எழுதப் படாத சட்டங்களைக் கொண்டு, தங்களது மரபுகளையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் ,உலகின் மிகச் சிறந்த மக்களாட்சி நாடுகளுள் சிறந்த நாடாகவும் இருக்கும் இங்கிலாந்தில் கலவரம்,வன்முறை, சூறையாடல், போன்ற செய்திகளைக் காணவும், கேட்கவும் மனம் வருந்துகிறது.சூரியன் மறையாத ஆட்சியைக் கொண்டிருந்த இந்நாடும் ,இந்நாட்டு மக்களும்,இன்று படும் வேதனையைச் சொல்லி மாளாது.பொது மக்கள் என்ன பாவம் செய்தனர்? ஒன்றுமறியா அப்பாவிகள் இவ்வாறு அல்லல் படுவது யாராலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று!
சோமாலிய நாட்டிலோ இன்னுமொரு கொடுமை!உணவின்றி தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மாண்டுபோகின்றனர்.மனிதத் தன்மை உள்ள எந்த ஒரு நாட்டவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.உணவு அளிக்க ஐ.நா அவையும் ,மற்ற நாடுகளும் தயாராக இருந்தாலும் அதை மக்களுக்கு அனுமதிக்கவோ, அதை அவர்கள் பெற்றுக்கொள்ளவோ. அந்நாட்டில் இருந்து செயல்படும் தீவிரவாதக்குழுக்களும்,இராணுவமும் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மக்கள் சமுதாயம் இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல இருப்பது, மனித சமுதாயம் மனிதத்தன்மையை இழந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது....
11 ஆகஸ்ட், 2011
இங்கிலாந்தில் அமைதி திரும்பட்டும் ; சோமாலியாவில் உணவுப் பஞ்சம் தீரட்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஜூலை 1, 2026 முதல் ...... 1. ஆதார் மின்னஞ்சல் புதுப்பிப்பு — இலவசமாகிறது ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2026 வரை , ஆத...
-
காமராஜர் மறக்க முடியாத மனிதநேய வரலாறு ஜூலை 15 என்றதும் தமிழகம் முழுவதும் ஒரு பெயர் தான் நினைவுக்கு...
-
இதயக் குழாய் அடைப்புகளைக் குறைத்து , இரத்த நாளங்களைப் பாதுகாக்க உதவும் 5 உணவுகள் இந்தியாவில் இதய நோய் ஒரு முக்கியக் கொல்லியாக உள்...
-
புதிய வரி முறையில் சம்பளதாரர்களுக்கு ₹12.75 லட்சம் வரை வரி இல்லை சுருக்கம்: இந்தக் கட்டுரை , சம்பளம் பெறும் வரிதாரர்களுக்குப் ப...
-
உலக ஒவ்வாமை தினம்: விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு ஒவ் வோர் ஆண்டும் ஜூலை 8 ஆம் தேதி உலக ஒவ்வாமை தினம் ( World Allergy Day) கடைப்பிடிக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக