19 அக்டோபர், 2021

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் (அக்டோபர் 19)

நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று



நாமக்கல் மாவட்டம் 1888 மாவட்டம் மோகனூரில் அக்டோபர் 19 அன்று பிறந்தவர், வெ.ராமலிங்கம் பிள்ளை. 

‘எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, கவிஞர் தமிழ் நாட்டில் கவிதை உலகில் தனிப்பெரும் கவிஞராக விளங்கினார். இதற்குக் காரணம் அவர் இளமைப் பருவத்தில் பெற்ற கல்வியாகும். 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கு நாமக்கல் கவிஞர் சிறந்த சான்றாவார்.

 நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகவும், அதன் பின், தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார். காங்கிரசில் இணைந்து, திருச்சி மாவட்டச் செயலர், கரூர் மற்றும் நாமக்கல் வட்டாரத் தலைவராகச் செயலாற்றினார்.

காந்தியப் பாதையில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1932 இல் நடந்த உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று, ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார்.

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞரானார். சாகித்ய அகாதமியில், தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார். கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என, பல தளங்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் மிகச் சிறந்த ஓவியரும் கூட.

இவர் எழுதிய, மலைக்கள்ளன் என்ற புதினம்,எம்.ஜி.ஆர்.,நடித்து, அதே பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்தது. தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

”கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, 

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”, 

”தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”, 

”கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” 


போன்ற பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் !

 'பத்ம பூஷண்' உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். 1972 ஆகஸ்ட் 24 அன்று, தன் 83வது வயதில் காலமானார்.


Featured post

How to calculate cut-off marks?