11 டிசம்பர், 2021
பன்னாட்டு மலை நாள்
பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.
https://www.fao.org/international-mountain-day/en/
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது
உலகின் பல்லுயிர்ப்பெருக்கத்திற்குப் பாதிக் காரணம் மலைகளே. புவி நிலப்பரப்பில் 27% மலைகளே நிரம்பியுள்ளன. உலக மக்கள்தொகையில் 15% மக்களுக்கு மலைகளே இருப்பிடமாய் அமைந்துள்ளது.உலக மக்கள்தொகையில் பாதிப்பேர் தங்களது அன்றாடக் குடிநீர்த்தேவைக்காக மலைகளையே நம்பியுள்ளனர்.
கடந்த 17 ஆண்டுகளில் மிக உயர்ந்த மலை உயரத்தில் உள்ள பகுதிகள் (3 500 மீட்டருக்கு மேல்) மக்கள்தொகை குறையும் போக்கை தொடர்ந்து அனுபவித்து வருகின்றன, மற்ற உயரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்தது. அனைத்து ஆப்பிரிக்கத் துணைப் பகுதிகளிலும், தென் அமெரிக்காவிலும், மத்திய மற்றும் மேற்கு ஆசியாவிலும், தாழ்வான பகுதிகளை விட மலைகளில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது.
வளரும் நாடுகளில், 648 மில்லியன் மக்கள் (மொத்த மலை மக்கள் தொகையில் 65 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் - 346 மில்லியன் - 2017 இல் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நமது தமிழ் இலக்கியங்களில், ஐவகை நிலங்களில் முதலிடம் வகிப்பது ,குறிஞ்சி ,என்னும் மலையும், மலை சார்ந்த இடமும் ஆகும்.வெற்பு, கிரி, அசலம், முதலான பல பெயர்களால் அழைக்கப்படும் மலைகளில் தான் ஆதிகுடிகள் வசித்தனர் என இலக்கியங்கள் கூறுகின்றன.
இத்தகு பெருமைகள் நிரம்பிய இயற்கை வளம் கொஞ்சும் மலைகளைக் காத்து, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வழிவகுப்போம்.
Featured post
Reading maketh a human
https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece
-
சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம். "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே...
-
1. சைவ சமயக் குரவர் ------------------- 2. மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் ------------------- 3. ‘ அழுது அ...
-
விநாடி - வினா 1. எய்ட்ஸ் நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன? எலிசா பரிசோதனை 2. நவீனக் கணினியின் தந்தை யார்? சார்லஸ்...