9 நவம்பர், 2021

தேசிய சட்டசேவைகள் தினம்

       


      ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1987- ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால்  சட்ட சேவைகள் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.   “அனைவருக்கும் நீதி” என்ற குறிக்கோளோடு உச்சநீதிமன்றம் 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இலவச சட்ட சேவையைத் துவங்கியது. இந்த தினமே சட்ட சேவைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு உறுதி செய்கிறது

     மாற்றுத்திறனாளிகள், பலவீனமானவர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உச்சநீதிமன்றம் விரும்பியது.

     இளம் வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகளையும், அதன் தொடர்பான சட்டங்களையும் தெரிந்துகொள்ள இத்தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

     இதன் மூலம் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்குத் தகுதியான சட்ட உதவி இலவசமாகக்  கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...