29 ஜூன், 2012

15/06/2012


1. எகிப்தியப் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான, வருமான உச்சவரம்பை` 4.5 இலட்சத்தில் இருந்து ` 6 இலட்சமாக உயர்த்துவது தொடர்பாக முடிவெடுப்பதை, மத்திய அமைச்சரவை தள்ளிவைத்துள்ளது.
3.  சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
4. தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்தில் வழக்கத்தை விட, 50 விழுக்காடு குறைவாகப் பெய்துள்ளது என, வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர். 
5. முதுகலை ஆசிரியர் தேர்வு, முழுக்க முழுக்க, தகுதியின் அடிப்படையில் தான் இருக்கும். ஏமாற்று கும்பலிடம் தேர்வர்கள் ஏமாற வேண்டாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் வலியுறுத்தியுள்ளது. 
6. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், மன உளைச்சல் காரணமாக மாணவர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கலந்தாய்வு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
7.யூரோக் கோப்பைக் கால்பந்துப்போட்டியின் லீக் ஆட்டத்தில்போர்ச்சுக்கல் அணி டென்மார்க் அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
                                                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

How to calculate cut-off marks?