29 ஜூன், 2012

28/06/2012


1. மியான்மர் ஜனநாயக தலைவர் அவுங் சாங் சூச்சிக்கு, பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
2. இலங்கையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பொருட்டு, மூன்று மாகாண கவுன்சில்கள் நேற்று கலைக்கப்பட்டன. 
3. ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர்களை தேர்வு செய்யும் போது, அனைத்து பள்ளிப் பாடத்திட்டங்களிலும், முதல் 20 விழுக்காடு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய தேர்வு முறையை, ஐ.ஐ.டி., கவுன்சில் உருவாக்கியுள்ளது. இது, அடுத்தாண்டு நடைமுறைக்கு வருகிறது.
4. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வருவதால், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளன. லிட்டருக்கு நான்கு ரூபாய் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
5.  பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
6. நீலகிரி மாவட்டம் குன்னூர் பாஸ்டியர் நிறுவனம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட துவங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்டத்துக்கு, 15 லட்சம் டோஸ் முத்தடுப்பு மருந்துகள் வெளியிடப்பட்டன.
7.கல்லூரி மாணவர்கள் மற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று, கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உமா கேட்டுக் கொண்டார்.
8.  யூரோ கோப்பை போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-இத்தாலி அணிகள் மோதுகின்றன.
9. விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...