29 ஜூன், 2012

26/06/2012


1.  வங்கதேசப் போரின் போது தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவையும், அவரது தாயையும் காப்பாற்றிய ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி அசோக் தாராவுக்கு, அந்நாட்டு அரசு உயரிய விருது அளித்து கவுரவிக்க உள்ளது. 
2.  இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின், 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மார்பளவு சிலை திறந்துவைக்கப்பட்டது.
3. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவராகத் தேடப்பட்டு வந்த சையத் ஜபியுதீன் அன்சாரி என்கிற அபு ஜிண்டால் எனும் பயங்கரவாதியை தில்லி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
4. மென்பொருள் தொழிலில் மிக முக்கியமான மையமாக மாறியுள்ள ஆந்திரா, வன்பொருள் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மின்னணு வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது. 
5. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் மைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்று, பிரதமரைச் சந்தித்து, நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, நாளை மறுநாள், வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
6. மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடாக, புதுச்சேரி மாநிலத்திற்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
7. மானியத்தில் வழங்கப்படும் உரங்களைத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
8. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2012- 2013) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. கோவை மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கபடி போட்டிகளில், ஆண்கள் பிரிவில் சுண்டக்காமுத்தூர் அரசு பள்ளியும், பெண்கள் பிரிவில் குளத்துப்பாளையம் அரசு பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன.
10. யூரோ கோப்பை கால்பந்துத் தொடரின் அரையிறுதிக்கு இத்தாலி அணி முன்னேறியது. பரபரப்பான காலிறுதியில்,இங்கிலாந்தை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து அணியைத் தொடரிலிருந்து வெளியேற்றியது.
                                                                                                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...