29 ஜூன், 2012

18/06/2012


1. நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற 12க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், இவ்வாண்டு 71 ஆயிரம் ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன.
2. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.1 எனப் பதிவாகி யுள்ளது.
3. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை வைத்துள்ள வெளிநாட்டவர்களில், இந்தியர்கள், 55ஆவது இடத்தில் உள்ளனர். 
4.யங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலைச் சுற்றியுள்ள நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும், கண்காணிப்புக் கருவிகளைப்பொருத்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
5. தமிழக, கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில், மணிக்கணக்கில் வரிசையாக நிற்கும் வாகனங்களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
6. தென்மேற்குப்பருவ மழை பெய்யத் துவங்கியதையடுத்து வால்பாறையில் தேயிலை உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது.
7. இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்குப் பெருமைதேடித் தந்துள்ளார்.
8.யூரோ கோப்பைக் கால்பந்துத் தொடரின் காலிறுதிக்கு ஏ பிரிவிலிருந்து கிரீஸ் அணி முன்னேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

How to calculate cut-off marks?