29 ஜூன், 2012

27/06/2012


1.இலண்டனில் உள்ள புகழ்பெற்ற, பிக் பென் கடிகாரக் கோபுரத்திற்கு, இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள 315 இந்திய மீனவர்களை வியாழக்கிழமை விடுவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
3. குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
4. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மா,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
5. சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஒப்புயர்வு மையமாகத் தரம் உயர்த்த, 10 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
6. பொதுத் தேர்தல் நடத்துவது போல், டி.என்.பி.எஸ்.சி., தேர்வை நடத்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
7. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கடந்த 4 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த,துணைவேந்தர் மன்னர் ஜவஹர், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
8. கோவையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று, அப்பள்ளியிலேயே 11ஆம் வகுப்பிற்கு சேர்க்கை வழங்கப்படாத மாணவர் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
9.  தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, முதல் கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ஆம் தேதி துவங்குகிறது.
10. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள முதலாவது அரையிறுதியில், நடப்பு சாம்பியன்களான ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.                                                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...