2 மே, 2019

பதிணென் சித்தர்கள்



சித்தர்கள் என்றாலே சித்து பெற்றவர்கள். சித்து வேலை என்பது மாய வேலை என்று நினைப்பது தவறு. இந்த பூவுலகில் மனிதனை பண்படுத்த அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த கலையே சித்து.

சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள். இரும்பை தங்கமாக்கும் வித்தையை கற்றவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் சக்தி கொண்டவர்கள். முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள். நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக்கொள்வார்கள். நீரிலும் நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தி செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் என புகழப்படுகிறார்கள்.

சித்தர்கள் தம் சித்தத்தை கொண்டு மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கையும் சிவமாக ஆக்கிகொண்டவர்கள். சாதாரணமாகக் கோவில்களில் யந்திரங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மேல் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வார்கள். அதன் சக்தி குறைந்தால் மீண்டும் ஆகம நெறிப்படி குடமுழுக்குச் செய்வர். ஆனால் சித்தர்கள் அடக்கமாயிருக்கும் கோவில்களுக்கு குட முழுக்குத் தேவையில்லை. ஜீவன் முக்தர்களின் உயிர்சக்தியின் இயக்கம் எப்போதும் அலை இயக்கமாக அங்கே பரவி நிற்கிறது.

அதை பல சன்னிதிகளுக்கு செல்லும் போதே நம்மால் உணர முடியும். நமது உடலில் ஒருவிதமான அதிர்வு ஏற்படும். மனது நிம்மதி அடையும். எனவேதான் அவர்கள் அடங்கிய இடங்களை நோக்கி ஓடுகிறோம். மனைத தியானப்படுத்துகிறோம்.

இவர்கள் உலகத்தவரின் துன்பங்கள் நீங்க வேண்டும் என்ற சத்தியத்தோடு சமாதி பெற்றவர்கள். அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பார்கள்.

இவர்கள் வினை காரணமாகப் பிறவி எடுப்பவர்கள் அல்ல. உலகை உய்விக்க வந்து தோன்றியவர்கள். இவர்களை நினைத்துப் போற்றினால் இவர்களின் அருளும் அதன் மூலம் இறையருளும் நமக்குக் கிடைக்கும்.

ஒரு சித்தன் சிறிது நேரம் சமாதி நிலையிலோ அல்லது தியான நிலையிலோ இருந்தால் அவன் பல ஆண்டுகள் உலகில் நல்ல அணுக்கள் வாழும் படி செய்து விடுவான். பெரும்பாலான சித்தர்களுக்கு ஆண்டவன் ஜோதி வடிவில் காட்சித் தருவான். சித்தர்களும் தம் பக்தர்களுக்கு ஜோதி வடிவிலேயே காட்சி தருவார்கள்.

கடவுளைக் காண முயல்கின்றவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் தேவாரம் கூறுகிறது.

மந்திரம் தந்திரம் யந்திரம் இவற்றால் ஆன்ம லாபம் பெறுவதற்கு வழிகாட்டியவர்கள் சித்தர்கள்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...