2 மே, 2019

🐂📣விவசாயப் பழமொழிகள்...📣🐂

⚛️தவளை கத்தினால் மழை 

⚛️அந்தி ஈசல் பூத்தால், 
அடை மழைக்கு அச்சாரம் 

⚛️தும்பி பறந்தால், தூரத்தில் மழை

⚛️எறும்பு ஏறில் ,பெரும் புயல் 

⚛️மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

⚛️தை மழை நெய் மழை

⚛️மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

⚛️தையும் ,மாசியும் வீடு மேய்த்து உறங்கு

⚛️புற்றுக் கண்டு கிணறு வெட்டு

⚛️வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தேப் பயிர் செய் 

⚛️காணி தேடினும் கரிசல் மண் தேடு

⚛️களர் கெட பிரண்டையைப் புதை 

⚛️கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி; 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

⚛️நன்னிலம் கொழுஞ்சி; 
நடுநிலம் கரந்தை ;
கடை நிலம் எருக்கு

⚛️நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

⚛️ஆடிப்பட்டம் தேடி விதை

⚛️விண் பொய்த்தால், மண் பொய்க்கும்

⚛️மழையடி புஞ்சை ; மதகடி நஞ்சை 

⚛️களரை நம்பிக் கெட்டவனும் இல்லை ; மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

⚛️உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

⚛️அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

⚛️புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

⚛️குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

⚛️ஆடு பயிர் காட்டும் ;
ஆவாரை கதிர் கட்டும் 

⚛️கூளம் பரப்பி கோமியம் சேர் 

⚛️ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

⚛️நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

⚛️காய்ச்சலும், பாய்ச்சலும் வேண்டும்

⚛️தேங்கிக் கெட்டது நிலம் ; 
தேங்காமல் கெட்டது குளம்

⚛️கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

⚛️சொத்தைப் போல் 
விதையைப் பேண வேண்டும்

⚛️விதை பாதி வேலை பாதி

⚛️காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

⚛️பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

⚛️கோப்பு தப்பினால், குப்பையும் பயிராகாது

⚛️ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

⚛️கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...