6 நவம்பர், 2021

போர் மற்றும் ஆயுத மோதல் வரலாற்றில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம்

       

     போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் 2001 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் தொடங்கப்பட்டு,ஆண்டுதோறும் நவம்பர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

     போர் மற்றும் ஆயுத மோதல்கள் இயற்கைச் சூழலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, பயிர்கள் அழிக்கப்படுகின்றன, நீர் வழங்கல்கள் விஷமாகின்றன,காடுகள் எரிக்கப்படுகின்றன. போருக்குப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழலின் அழிவுக்கும் சேதத்திற்கும் காரணமாகின்றது. அதைவிட நீண்டகால விளைவுகள் மோசமாக இருக்கும். 

    இறந்த மற்றும் காயமடைந்த வீரர்கள் மற்றும் குடிமக்கள், அழிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் அடிப்படையில் மனிதகுலம் எப்போதுமே போர் இழப்புகளைக் கணக்கிட்டாலும், சுற்றுச்சூழல் பெரும்பாலும் போரின் விளம்பரப்படுத்தப்படாத பலியாகவே இருந்து வருகிறது. 

     போர் அல்லது மோதலின் போது, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்நாள் முயல்கிறது. 

இந்த நாளின் நோக்கங்கள் இரண்டு வகையானவை. 

1. தங்கம், எண்ணெய், மரம், வைரங்கள் அல்லது பிற அரிய வளங்கள் போன்ற அதிக மதிப்புள்ள சுற்றுச்சூழல் வளங்கள் மீது ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவது. 

2. மக்களின் வாழ்க்கையை நிலைநிறுத்தும் இயற்கை வளங்கள் சேதமடைந்தால் நீண்ட காலத்திற்கு அமைதி இருக்காது என்பதை ஐக்கிய நாடுகள் சபை உணர்ந்துள்ளது.எனவே அவற்றைக் காப்பது.

    எனவே போர்கள் மற்றும் மோதல்களின் சுற்றுச்சூழல் அம்சத்தில் போர்த் தடுப்பு, அமைதி காத்தல், மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, கடந்த 60 ஆண்டுகளில், அனைத்து உள்நாட்டு மோதல்களில் 40% இயற்கை வளங்களை சுரண்டப்பட்டுள்ளன. 

     மோதல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, உலகின் பெரும்பாலான நாடுகளை விட, மிகப்பெரிய இராணுவங்கள் அதிக கார்பன் டை ஆக்சைடு வாயுவை உருவாக்குகின்றன. 

   பல ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தான், கொலம்பியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இயற்கை வளங்களின் பெரும் இழப்புகளுக்குப் போர்களே வழிவகுத்தன. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் படி, 2018 இல் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் காடழிப்பு விகிதம் 95% அளவை எட்டியது.

     இத்தகு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும், போர்களைப் புறந்தள்ளுவோம். சுற்றுச்சூழலைக் காத்து, உயிர்கள் வாழ ஏதுவான இடமாக இவ்வுலகை மாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine