அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ,11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1500 வீதமும், 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ 2000 வீதமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 11. 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டமும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு 4 சோடி கால்சட்டைகளுடன் கூடிய சட்டைகளும், மாணவிகளுக்கு, சல்வார் கமீசுகளும் வழங்கப்படவும் இந்த அறிவிப்பு வழிவகை செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக