பன்னாட்டுக் குடும்ப நாள் அல்லது உலகக் குடும்ப நாள் (International Day of Families) என்பது ஆண்டுதோறும் மே 15 ஆம் நாள் கொண்டாடப்படும் நிகழ்வாகும். 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இதற்கான தீர்மானத்தை (A/RES/47/237) நிறைவேற்றி,1994 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் குடும்பதினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த
வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும்
முகமாக நிறைவேற்றியது. ஒரு குடும்பம் பிணைப்போடு இருக்க சகிப்புத்தன்மை அவசியம். ஒருவரின் பிழைகளை
ஒருவர் சகித்து, அதைச் சுட்டிக் காட்டி அல்லது தவற்றை உணர்த்தும்போது தான்
அந்தத் தவறு மாறுகிறது. குடும்ப அமைப்பு இப்படித் தான் இயங்குகிறது.
இன்றைய
காலக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் பொறுத்து கொள்வது குறைந்து வருகிறது.
இந்நிலையில், குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த
விழிப்புணர்வ அதிகரிக்கவும், குடும்பங்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார
மற்றும் புள்ளிவிவரச் செயல்முறைகள் குறித்த அறிவை அதிகரிக்கவும்,குடும்பங்களின் முக்கியத்துவம், சமூகத்தில் அவற்றின் பங்கு
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மே 15ஆம் தேதி அன்று சர்வதேச குடும்ப தினம்
கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்
வறுமை, சமத்துவமின்மை போன்ற குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில் நமது சமூகத்தில் குடும்பங்களின் பங்கை அங்கீகரிப்பதில் சர்வதேச குடும்ப தினம் முக்கிய பங்கு வகிக்கிறது.
குடும்ப அமைப்பு தனிமனிதர்களின் தனிமையையும், வெறுமையையும் போக்கும். ஆனால் அதற்கு குடும்ப அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், ஒருவர் மற்றவர்களின் உணர்வை மதிக்கும் பண்பும் தேவை. கௌரவம், சமூகத்தின் மீதான அச்சம் காரணமாக உங்கள் குழந்தைகளின் ஆசைகளை விருப்பங்களை நசுக்கினால் அவர்கள் குடும்பத்தை வெறுக்க நேரிடும். பகுத்தறிவுடனும் அன்புடனும் குடும்பத்தை பராமரிப்போம். இனிய குடும்பதின வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக