9 பிப்ரவரி, 2012

09/02/2012


1. கிளர்ச்சியைக் கைவிட்டு தேச ஒற்றுமையைக் காப்பாற்றுமாறு,மாலத்தீவின் புதிய அதிபர் முகமது வாஹீத் ஹசன், அந்த நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
2. திபெத் பிரச்னை சீனாவின் உள்நாட்டு பிரச்னை.எனினும் இப்பிரச்னையில் சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.
3. குறைந்தபட்சம் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, உலகின் பழமைவாய்ந்த ஓவியம் ஒன்று ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்ட்டுள்ளது.
4. கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட, குஜராத் கலவரத்தைக் குறித்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது இறுதி அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.
5. ஹரியானா மாநிலம், குருசேத்ராவில் அமைக்கப்பட்டுள்ள 207 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில், 90 அடி நீளம், 60 அடி அகலமுள்ள தேசியக் கொடியை, குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்தார்.
6. ஆளில்லாமல் பறந்து தாக்கும் திறன் கொண்ட லக்ஷியா-1 விமானம் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
7. கோவையில் கள்ளநோட்டு வைத்திருந்ததாக, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இருவரை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
8. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கும் பணி குறித்து, தனிக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
9. தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள 4.85 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் படிப்படியாக மீட்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறினார்.
10. முத்தரப்பு ஒருநாள் மட்டைப்பந்துப்போட்டித்  தொடரில், இந்திய அணி முதல் வெற்றியை பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில், ஸ்வின், விராத் கோலி ஆகியோரின் சிறப்பானஆட்டத்தால் இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

உலக இரத்த அழுத்த தினம் - மே 17

  இரத்த அழுத்தம் — அமைதியான கொலையாளி World Hypertension Day | May 17 உலகில் உயர் இரத்த அழுத்தம் உள்ளோர் - 130 கோடி இயல்பான இரத்த அழுத்த அளவு...