18 ஜனவரி, 2012

18/01/2012

1. சீனாவில் மொத்த மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டோர், நகரங்களுக்கு வந்து விட்டதாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2. அமெரிக்க காங்கிரசில் தாக்கலாக உள்ள இரு மசோதாக்களை எதிர்த்து, இணையக் கலைக் களஞ்சியமான "விக்கிபீடியா' இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகஅறிவித்துள்ளது.
3. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் இப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
4. இந்திய-சீன எல்லைப் பகுதியில், அமைதியை உறுதிசெய்யும் புதிய செயல்முறை ஒன்றை உருவாக்குவது என செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது 5.55
5.எதிர்வரும் ஜூலை மாதம், பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் தற்போதைய குடியரசுத் தலைவர்.
6. மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெப்பம் மைனஸ் நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, கடும் பனிப்பொழிவு உள்ளது.
7. வணிகவரித் துறையை ரூ. 230 கோடியில் முழுமையாக கணினிமயமாக்க தமிழகமுதல்வர் உத்தர விட்டுள்ளார்.
8. புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு முழு நிவாரணம் கிடைக்கும் வரை, மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல மாட்டோம் என்று, கடலூர் மாவட்ட மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.
9. தோஹாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றது.
10. சுற்றுச்சூழல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
                                                                                                                                    -பாரதிஜீவா

Free Code Script

13 ஜனவரி, 2012

13.01.2012

1. பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம், பாதுகாப்புச் செயலர் நீக்கம் போன்ற காரணங்களால் அரசியல் பரபரப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வியாழக்கிழமை துபைக்குச் சென்றுவிட்டார்.
2. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இரண்டு நாள் இஸ்ரேலியப் பயணத்தின்போது,  மிக நெருங்கிய நட்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் விருந்து உபசரிப்பு அளிக்கப்பட்டது.
3.  சோமாலிய கடற்பகுதியில் அடிக்கடி நிகழும் கடற்கொள்ளையைத் தடுக்க அனைத்து நாடுகளிடையே ஒருங்கிணைந்த உத்தியுடன் கூடிய செயல்பாடு மிக அவசியம் என்று இந்தியா ஐ.நா அவையில் வலியுறுத்தியுள்ளது.
4. மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 இல், சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சியில் 50 லட்சம் மாணவர்கள் நேற்று ஈடுபட்டனர்.
5. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
6. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி நவம்பர் மாதத்தில் 5.9 சதவீதமாக உயர்ந்தது.
7. பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிறப்புப் பேருந்துகளை, 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
8.  புயலில் பல நூறு ஏக்கர் கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளதால், கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடுதல் விலைக்கு கரும்பு விற்கப்படுகிறது.
9.எரிவாயு எடுத்துச் செல்லும், சரக்குந்து உரிமையாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.
10. 2015- ஆம் ஆண்டுடைபெறவுள்ளஉலக கோப்பைத் தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால், ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியதன் மூலம், தொடர் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதை சூசகமாக தெரிவித்தார் தோனி.
                                                                                                                        -பாரதிஜீவா

Free Code Script

12 ஜனவரி, 2012

12/01/2012


                                                        
1.  தெற்காசிய நாடுகளில், பத்தாண்டுகளில், இராணுவத்திற்கான செலவு 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
2. பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், வேலைக்காக  பூமியின் தென்கோடியில் உள்ள அண்டார்டிகாவுக்குக் கூட செல்ல, அந்நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். 
3. பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேர்மையற்றவர் என உச்சநீதிமன்றம் பகிரங்கமாகத் தாக்கியுள்ளதை அடுத்து, இராணுவம் எச்சரிக்கை.
4. இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில், கடலில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 
5. உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களைக் கவர, அவர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்ட ` 28 கோடி சிக்கியுள்ளது. 
6. 1.34 கோடி குடும்பங்கள் பயன்பெறும், ஏழைகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை” தமிழக முதல்வர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
7.  தானே புயலால் சேதமடைந்த பலா, முந்திரி மற்றும் தென்னை போன்ற பயிர்களை மீண்டும் பயிரிட இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
8.  கூடங்குளம் அணுஉலை 3 மாதங்களில் இயங்கத் தொடங்கும் என இந்திய அணு மின் கழகத்தின் இயக்குநர் எஸ்.ஏ. பரத்வாஜ் தெரிவித்தார்.
9. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 111.03 அடியாக இருந்தது. 
10. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்தது போன்ற சோகம் ஆஸ்திரேலிய தொடரில் ஏற்படாது. கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெறுவோம்,'' என, இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
                                                                                                -பாரதிஜீவா




Free Code Script

10 ஜனவரி, 2012

10/01/2012


                                                                 
1. இந்தியா - சீனா இடையிலான ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த, இந்திய ராணுவப் பிரதிநிதிகள் 15 பேர் கொண்ட குழு நேற்று சீனத் தலைநகர் பீஜிங்கிற்குச் சென்றது. 
2. ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நேரில் ஆய்வு செய்தார்.
3. ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களுக்கு, ஒன்பது கோடி ரூபாய் வரை, மானியம் வழங்க, தமிழக முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.
4.  உத்தர பிரதேசத்தில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையின் போது, ஒரு வாகனத்திலிருந்து ` 13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 
5. நதிகளை இணைக்க, இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன என்பது தொடர்பான, சுருக்கமான குறிப்பை, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என,உச்சநீதிமன்றம் மய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
6. இந்தியாவில் முதல்முதலாக, கடல் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்யும் ரேடார் கருவி, குளச்சல் பகுதியிலுள்ள கடலில் அமைக்கப்பட்டது. 
7. வன விலங்குகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறது என்பதற்காக, அவற்றை தடுக்க, கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என, சென்னை ஆராய்ச்சி பிரிவு, தலைமை வனப் பாதுகாவலர் கூறியுள்ளார்.
8. மட்டைப்பந்துத் தொடர் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, "கோ- கார்ட்டிங்' விளையாட்டில் பங்கேற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
                                                                             -பாரதிஜீவா


Free Code Script

9 ஜனவரி, 2012

09/01/2012


                                                       
1. அணு சக்தி எரிபொருள், மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்க உதவும் செறிவூட்டிய யுரேனியம் தயாரிக்கும் நடவடிக்கையை புதிய மையத்தில் ஈரான் தொடங்கியுள்ளது.
2. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் வசித்தது தனக்குத் தெரியாது என்ற, அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
3. நாட்டில் நெருக்கடியான பொருளாதாரச் சூழல் நிலவுகிறது என்று, பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார்.
4.  முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் பென்னி குயிக்குக்கு, `1 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என்று, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
5. தமிழக நதிகளை இணைத்தால் தண்ணீருக்காக, அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் யோசனை தெரிவித்தார்.
6. போக்குவரத்துத் துறை சார்பில் இயக்கப்படும், இரவு நேரப் பேருந்துச் சேவை விரைவில், நகர் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
7. சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், டிப்சரிவிச் (செர்பியா) ஜோடி, வாகையர் பட்டம் வென்றது. 
8. Prime Minister Manmohan Singh called upon the Indian communities living abroad to play a more active role and contribute "much more" to the building of a modern India.
9. The crowd on the third and last day of the fifth edition of Covai Flower Show broke its earlier records with over 1.25 lakh footfalls.

10. My fight against corruption will continue once I get better – Anna Hazare says.                                                                                                     - பாரதிஜீவா




Free Code Script

6 ஜனவரி, 2012

06/01/2012


                                                                  
1. காஷ்மீர் வரைபடத்தில் இருந்த தவறு சரிசெய்யப்பட்டு, புதிய வரைபடத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
2.  பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முறையான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அத்துடன், வேட்புமனு தாக்கலும் துவங்கியது.
3. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக 21 பெண்களைக் கொண்ட புதிய குழுவை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு உருவாக்கி வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
4. கரும்புக்கான ஆதரவு விலையை முதல் கட்டமாக டன்னுக்கு `2,100 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
5.  தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியைத் தாண்டியுள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.04 கோடியாக அதிகரித்துள்ளது.
6.சிட்னி மட்டைப்பந்துத் தொடர் போட்டியில் இந்தியா, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்து,பின்தங்கியுள்ளது.
7. Union Home Minister P. Chidambaram on Thursday inaugurated a ` 229- crore, e-office project for the Border Security Force (BSF).
8. Foodgrains production in the  Tamilnadu is expected to vault to 115 lakh tonnes this year as against 76.6 lakh tonnes last year 
9. The Transport Department – Coimbatore Circle has come up with a short film on CD to generate awareness on road safety.
10. Australian scientists have determined the structure of a key enzyme that could facilitate the understanding of how deadly viruses like HIV and Hepatitis C infect the human body.                                                                -பாரதிஜீவா


Free Code Script

5 ஜனவரி, 2012

05/01/2012


                                                               
1. அறிவியல் ஆராய்ச்சித் துறையில், சீனாவைப்போல்,  வளர்ச்சியை அடைய வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறைந்தது இரண்டு சதவீதத்தையாவது, அறிவியல் ஆராய்ச்சித் துறையில் முதலீடு செய்ய வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
2. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி, தமிழக - கேரள கூட்டுக் குழு கட்டுப்பாட்டில் நிர்வகிக்க கேரள அரசு தயாராக உள்ளது என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். 
3. ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், வீட்டிலிருந்து துவக்கப்பட வேண்டும் என, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். 
4.  கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அனைத்து உதவிகளையும்,தமிழக அரசு செய்யும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
5. சிட்னி தொடர் மட்டைப்பந்துப்போட்டியில் ஆஸ்திரேலியா 392 ஓட்டங்கள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது.அணித்தலைவர் கிளார்க் மூன்றாவது சதம் அடிக்க வாய்ப்பு.
6. The two Indian traders, who have been holed up in a hotel in this southern Chinese trading town and facing threats to their lives, were released on Wednesday evening,
7. The Union Cabinet is likely to give its final approval for a national mission to try and improve the accuracy of monsoon forecasts by this month-end.
8. State government on Tuesday announced a hike in prize money awarded to medal winners in Olympics, Asian, Commonwealth, South Asian and National Games.
9. The Centre on Wednesday clarified that, barring the Public Provident Fund (PPF), the rates of interest on all small savings schemes will remain fixed throughout the tenure of investment.
10. Health authorities in the Philippines have declared an outbreak of a deadly rat fever in the flood-hit areas of the country’s southern region.
                                                                                                                                    -பாரதிஜீவா

Free Code Script

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece