7 டிசம்பர், 2021

கொடிநாள்

 


     கொடி நாள் என்பது, இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.

    ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக, இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல், இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

      கடுங்குளிர், உறைபனி, பேய்மழை, வெள்ளம், போன்ற இயற்கை இடர்ப்பாடுகள், உணவு, குடிநீர், தங்குமிடம் போன்ற வசதிகள் இல்லாத இடங்கள், குடும்பம், உறவுகளை விட்டுத் தனித்திருத்தல் - இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, நாட்டுப் பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் நம் படைவீரர்கள்.

 “தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக முப்படை வீரர்கள் திகழ்கிறார்கள்".
      முப்படை வீரர்களுடைய குன்றாத விசுவாசமும் கடமையில் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பும் இந்தியாவை வலிமையுள்ள தேசமாக மாற்றியுள்ளது.

     வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புகள், உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கைச் சீற்றம் போன்றவற்றினைத் தீரமுடன் எதிர்கொண்டு, தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் வீரர்கள் ஆற்றிய தியாகம் அளவிடற்கரியது. 

       அவர்களுடைய வாழ்நாளின் சிறந்த தருணங்களை, நாட்டிற்காகவே அர்ப்பணித்துச் சேவையாற்றி, இராணுவத்திலிருந்து விடைபெறும் போது, நம்முடைய நன்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்க வேண்டியது அவசியமாகும்.

    தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும்,ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதி, படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 

   பெற்ற சுதந்திரத்தைப் பேணி, நாட்டின் எல்லைகளைக் காவல்தெய்வங்களாகக் காத்தும், இயற்கைப் பேரிடர்களின்போது, உற்ற துணைவர்களாக நின்றும், நம்மைப்பாதுகாக்கும் படைவீரர்களுக்கு, நன்கொடைகளை கொடிநாள் நிதியாக, மனமுவந்து அளிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...