3 ஜனவரி, 2012

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- கால அட்டவணை அறிவிப்பு



இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி தேர்வுத் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 4ம் தேதி- தமிழ் முதல் தாள்
ஏப்ரல் 6ம் தேதி- தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 11ம் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 12ம் தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 16ம் தேதி- கணிதம்
ஏப்ரல் 19ம் தேதி- அறிவியல் 
ஏப்ரல் 23ம் தேதி- சமூக அறிவியல் 
தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தினால், அரசு மற்றும் மெட்ரிக் என சி.பி.எஸ்.இ. தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே பாடப்பிரிவின் கீழ் தேர்வு எழுத உள்ளனர்.



Free Code Script

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine