3 மார்ச், 2022

உலகக் காட்டுயிர் தினம் (World Wildlife Day)

      அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவர இனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வோராண்டும், மார்ச் 3 அன்று உலகம் முழுவதும் உலகக் காட்டுயிர் தினம் (World Wildlife Day) அனுசரிக்கப்படுகிறது. 

    2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஐ. நா நடத்திவருகிறது.

       காட்டுயிர்களைச் சுரண்டுவது என்பது 130.000 – 70.000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் வெளியேறிய காலத்தில் இருந்தே மனிதனின் குணவியல்பாக இருந்துவருகிறது. உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களின் அழிவு விகிதம் கடந்த சில நூறு ஆண்டுகளாக மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நாம் இந்த உலகில் ஹோலோசீன் பெருமளவு அழிவு எனப்படும். 

      ஆறாவது பெரும் அழிவு நிகழ்வில் இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. காட்டுயிர் அழிப்பு எப்பொழுதும் குறிப்பிட்ட இனங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதில்லை. எனினும் பூமி முழுவதும் எண்ணற்ற இனங்களின் குறிப்பிடத்தக்க இழப்பு, காட்டுயிரை அழித்தலின் திறனாய்வில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. 

    திரும்பக்கிடைக்காத வன எண்ணிக்கைகளுக்கு சேதம் விளைவித்தலின் நிலையாக இந்த அழிவு இருக்கிறது. அதிகப்படியாகக் கொல்லுதல், இருப்பிடத்தை அழித்தல் மற்றும் துண்டாக்குதல், அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களின் தாக்கம் மற்றும் தொடர் அழிவு உள்ளிட்ட நான்கு மிகவும் பொதுவான காரணங்கள் காட்டுயிரை அழித்தலுக்கு வழிவகுக்கின்றன.

     காட்டில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அதனைச் சுற்றி வாழும் மற்ற உயிர்களுடன் உட்சுற்றுப் பிணைப்பைக் கொண்டுள்ளன. நீர்யானை போன்ற பெரிய தாவர உணவு உண்ணி விலங்குகளில், நீர் யானையில் வளரும் பல ஒட்டுண்ணி பூச்சிகளை பூச்சியுண்ணுகின்ற பறவைகள் உணவாக உட்கொள்கின்றன. இந்த நீர்யானையானது இறப்பதற்கும் கூட இந்தப் பறவைகளின் கூட்டம் காரணமாகிவிடுகிறது. 

       மேலும் இது பறவைகளைச் சார்ந்திருக்கும் மற்ற இனங்கள் பாதிக்கப்படுவதன் மூலமாக தொடர்ந்து அழிவுக்கு வழிவகுக்கிறது. டோமினோ விளைவு எனவும் குறிப்பிடப்படும் இந்தத் தொடர் விளைவுகளின் தொடர்ச்சி, சூழ்நிலையியல் சமூகத்தில் ஏற்படக்கூடிய மிகவும் அழிவு ஏற்படுத்தக்கூடிய செயல்பாட்டிற்கு வெகுதொலைவில் இருக்கிறது. மற்றொரு எடுத்துக்காட்டாக இந்தியாவில் காணப்படும் இரட்டைவால் குருவிகள் மற்றும் உண்ணிக் கொக்குகள், கால்நடைகளின் உடல் மேற்பகுதியிலிருப்பவற்றை உண்கின்றன. 

     அதனால் அவற்றை கிருமி நீக்கம் செய்யப்பட்டவையாக இருக்க விடுகின்றன. ஒரு வேளை நாம் இந்தப் பறவைகளின் இருப்பிடங்களை அழித்தால் அதனால் கால்நடைகளின் எண்ணிக்கையில் இழப்பு ஏற்பட ஏதுவாகலாம். ஏனெனில் அவற்றால் சில நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்படலாம். பாம்புகளை அழிப்பதால்,எலிகளின் எண்ணிக்கை பெருகி, உணவுப்பஞ்சம் ஏற்படலாம். பறவைகளைக் கொல்வதால், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.தவளைகளின் அழிவு கொசுக்களின் எண்ணிக்கைப் பெருக்கம்.


    எனவே உயிர்களுக்கிடையே உள்ள பிணைப்பு, உணவுச் சங்கிலியின் இன்றியமையாமை ஆகியவற்றை அறிந்து., வன உயிர்களைக் காப்பது இப்பூவுலகில் வாழும் ஒவ்வொருவரின் கடமையாகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...