28 ஜனவரி, 2022

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் பிறந்த நாள்

     இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடியும், பஞ்சாப் சிங்கம் (பஞ்சாப் கேசரி)  என்றழைக்கப்படுவருமான, லாலா லஜபதி ராய் பிறந்த தினம் இன்று (ஜனவரி 28)

    லாலா லஜபதி ராய் ஓர் எழுத்தாளரும், அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். 

லால் - பால் -பால்

    லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

    இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். ராய், சட்டம் பயின்றவரான லஜபதி ராய் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். 1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. 

    ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும்,ஆங்கிலேயர்களிடமிருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.

    பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக, பிரிட்டிஷ் அரசு இவரைப் பர்மாவுக்கு நாடு கடத்தியது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால், தாய்நாடு திரும்ப அனுமதித்தது. 

    1920 இல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1928 அக்டோபர் 30 அன்று, சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, எதிர்த்து, அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தார். எனினும் பிரிட்டிஷ் அரசு கடுமையாகத் தாக்கியதை அடுத்து, சில தினங்களிலேயே உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...