12 டிசம்பர், 2021

உலக சுகாதாரப் பாதுகாப்பு தினம்

      


     உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பதன் பொருள், பொருளாதாரச் சிரமம் இன்றி ஒவ்வொருவரும் தரமான சுகாதாரச் சேவைகளைப் பெறுவது என்பதே 

    உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப் படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையில், ஒருமனதான தீர்மானம் நிறைவேறிய நாள் இதுவே.

    உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, 1948-ஆம் ஆண்டின் உலக சுகாதார நிறுவன அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. 

    அது, சுகாதாரம் அனைவரின் அடைப்படை உரிமை என்றும், அனைவருக்கும் அடையக்கூடிய அதிக அளவை அதில் அடைய வேண்டும் என்றும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகளால் தழுவப்பட்ட, புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.

    உலகின் எப்பகுதியிலும் இருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் வருமான அளவு,  சமூக நிலை, பால், சாதி அல்லது மத வேறுபாடின்றி சுகாதாரப் பராமரிப்பைப் பெற சமமான வாய்ப்பை உறுதி செய்வதே உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பதற்குப் பொருளாகும். 

    மலிவான, பொறுப்பான, தகுந்த சுகாதாரச் சேவையை உறுதியான தரத்தோடு அளிப்பதே அதன் நோக்கமாகும். அதில் தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்க்கைப் பரமரிப்புகள் அடங்கியுள்ளன.

   உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, உலக அளவில் ஏறத்தாழ 100 கோடி மக்களுக்குத் தங்களுக்குத் தேவைப்படும் சுகாதாரச் சேவைகளைப் பெற முடியவில்லை. 

     மருத்துவச் செலவுகளினால் ஆண்டுதோறும் சுமார் 1.50 கோடி மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உட்படுகின்றனர், மற்றும்  1 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுகின்றனர்.  

உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு ஏன்?

     இன, மத, அரசியல் நம்பிக்கை, சமூகப் பொருளியல் நிலை ஆகிய எந்த ஒரு வேறுபாடும் இன்றி உடல்மன ஆரோக்கியத்தை அனுபவிக்க உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள மனித உரிமை ஆகும். 

    குடும்ப ஆரோக்கியமும் நல்வாழ்க்கையும், உணவும், உடையும், உறைவிடமும், சுகாதாரப் பராமரிப்பும் அடங்கிய ஒரு தரமான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதரும் பெறவேண்டும்.

    வேலையின்மை, நோய், விபத்து, ஊனம், விதவைநிலை, முதுமை ஆகிய சூழ்நிலைகளைச் சமாளிக்க இவை முக்கியமானவை ஆகும். நீண்ட கால பொருளாதார மேம்பாட்டுக்குச், சிறந்த ஆரோக்கியமே அடிப்படை. 

    உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு இருவித நன்மைகள் கிடைக்கின்றன: 

1. ஆரோக்கியமான சமுதாயம் 2. வலிமையான பொருளாதாரம்.

இந்தியாவில் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பை உருவாக்க வழிகாட்டிய பத்து கொள்கைகள்:

1. அனைவருக்குமானது 2. சமத்துவமானது 3.ஒதுக்கலோ பாகுபாடோ இல்லாதது 4. நியாயமான தரமான விரிவான பராமரிப்பு 5. பொருளாதாரப் பாதுகாப்பு 6. நோயாளியின் உரிமைப் பாதுகாப்பு 7. வலிமையான பொது சுகாதாரத்துக்கு வழிவகுப்பது 8. பொறுப்பானதும் வெளிப்படையானதும் 9.சமுதாயப் பங்கேற்பு 10. சுகாதாரத்தை மக்களின் கரத்தில் அளிப்பது 

உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பின் நன்மைகள்

 * பொதுமக்களின் ஆரோக்கிய மேம்பாடு

 * திறமையான, பொறுப்புள்ள, வெளிப்படையான சுகாதார அமைப்பு

 * வறுமை குறைதல்

 * அதிக உற்பத்தி

 * வேலைவாய்ப்புப் பெருகுதல்

 * பொருளாதாரப் பாதுகாப்பு

 * அதிக சமத்துவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine