21 மே, 2019

Rajiv Gandhi anniversary

நாட்டின் ரத்த‌ நாளங்களான உள்ளா‌ட்சி அமைப்புகள் தங்களது தேவையை தாங்களே திட்டமிட்டு நிறைவேற்றிக்கொள்ளும்‌ வகையில், பஞ்சாயத் ராஜ் எனும் சட்டத்தை‌ நிறைவேற்றியவர். இந்தியாவில் ஏற்பட்ட தகவ‌ல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்‌டவர். இன்று உ‌லகமெங்கும் கணினித்துறையில் இந்திய இளைஞர்கள் கோலோச்சி வருவதற்கு‌ மூல காரணமாகத் திகழ்ந்‌தவர். அரை மனதுடன் அரசியலுக்கு வந்த போதிலும் அளவற்ற சாதனைகளைப் படைத்த‌வர். 198‌5ஆம் ஆண்டு, சுற்‌றுச்சூழலை‌ப் பாதுகாத்திட தனி அமைச்சகத்தை உருவாக்கினார். அதே வருடம், 'கட்சித்தாவல் தடைச் சட்டத்தை'‌ அறிமுகப்படுத்தி‌, நேர்மையற்ற அரசியல்‌வாதிகள் கட்சித்தாவல் மூலம் அரசியலை பாழ்படுத்தி‌ கேலிக்கூத்தாக்கி வருவதற்கு முடிவு கட்டினார்.

நேர்மையானவர்களுக்கும், துடிப்பானவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க‌ வேண்டும் என்ற அடிப்‌படையில் தனது அமைச்சரவையை உருவாக்கினார். அப்போது இந்திரா காந்தியிட‌மே நற்பெயர் வாங்கியவர் என்பதால், வி.பி.சிங்கிற்கு நிதித்துறையை ஒதுக்கினார் ராஜீவ்.

"நேருவைப் போல உலக சமாதானத்திற்காக விழையும் உண்மையான தலைவர்" என சிங்கப்பூரை கட்டமைத்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ- வால் பாராட்டப் பெற்றவர். அவர்தான் ரா‌ஜீவ் காந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...