28 பிப்ரவரி, 2012

29/02/2012


1. இந்த ஆண்டின், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ,முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
2. ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் இன்று கொண்டு வரப்படவுள்ளது.
3.  2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைக்குமிடையே நடந்த இறுதிப் போரில் 9000 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ,இலங்கை அரசு அறிவித்துள்ளது.
4. அமெரிக்காவில், உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த ஆண் குழந்தை, அதிசயமாக உயி்ர் பிழைத்துள்ளது.
5. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த, அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
6. தமிழகத்தில், குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை, மேலும் ஒரு மாதம் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7. தமிழகத்தில் நிலவி வரும் மின்பிரச்னையை தீர்க்க, கூடங்குளம் அணுமின் திட்டம் அவசியம் தேவை என, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைத்தின் முன்னாள் தலைவரும, மூத்த விஞ்ஞானியுமான, பல்தேவ் ராஜ் கூறியுள்ளார்.
8. வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட, ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள, வாட்டர்பால்ஸ் மற்றும் அட்டகட்டி வனப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
9. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டியில், வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு, சகாரா இந்தியா பரிவார் நிறுவனம் சார்பாக `1 கோடியே 20 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்குகிறது. 
10. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கூடுதல் (போனஸ்)புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளது.

Free Code Script

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...