ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெனாலி என்ற இடத்தில் பிறந்த ரோசையா, வணிகவியலில் பட்டம் பெற்றவர். கல்லூரிப் பருவத்தில் மாணவர் தலைவராக தேர்வான அவர், பின்னர் அரசியலில் நுழைந்தார். 1968, 1974, 1980 ஆகிய ஆண்டுகளில் ஆந்திர சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 முதல் 1997ம் ஆண்டு வரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக அவர் செயல்பட்டுள்ளார். 1998ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற ரோசையா, ஜெகன்மோகன் ரெட்டி சூறாவளியில் சிக்கி அடுத்த ஆண்டே பதவியிழந்தார். ஆந்திர சட்டசபையில் 16 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அவர் சாதனை படைத்துள்ளார். தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகிக்கிறார். ரோசையாவுக்கு சிவலெட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ செய்தியை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.
27 ஆகஸ்ட், 2011
தமிழக ஆளுநராக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 நம் விவரங்களை நாமே பதிவு செய்வோம் ( Self Enumeration) இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027...
-
காமராஜர் மறக்க முடியாத மனிதநேய வரலாறு ஜூலை 15 என்றதும் தமிழகம் முழுவதும் ஒரு பெயர் தான் நினைவுக்கு...
-
புதிய வரி முறையில் சம்பளதாரர்களுக்கு ₹12.75 லட்சம் வரை வரி இல்லை சுருக்கம்: இந்தக் கட்டுரை , சம்பளம் பெறும் வரிதாரர்களுக்குப் ப...
-
உலக ஒவ்வாமை தினம்: விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு ஒவ் வோர் ஆண்டும் ஜூலை 8 ஆம் தேதி உலக ஒவ்வாமை தினம் ( World Allergy Day) கடைப்பிடிக...
-
ஹைட்ரஜன் ரயில் உலகில் இந்தியா நுழைந்தது சுத்தமான பயணத்தின் புதிய அத்தியாயம் இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு முக்கியமான மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக