7 மார்ச், 2012

08/03/2012


1. தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்சுக்குள் குடியேறுகின்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கையை பாதியாய்க் குறைக்க திட்டங்கள் வைத்துள்ளதாக அதிபர் நிகோலா சர்கோசி பரப்புரை.
2. பாகிஸ்தானிடம்,90 முதல் 110 அணுஆயுதங்கள் வரை உள்ளதாக, அணு ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச இயக்கம் தெரிவித்துள்ளது.
3.1912ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு சந்திரனின் அதிக ஒளி வீச்சே காரணம் என தெரிய வந்துள்ளது.
4. மாலத்தீவில், நஷீத் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு, தான் காரணமல்ல என அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி கயூம் கூறியுள்ளார். 
5. பாலக்காடு பிளாச்சிமடையில் செயல்பட்டு வந்த, தனியார் குளிர்பான நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய மாநில அரசுகள் நிவாரணம் வழங்கவேண்டும் - சமூகசேவகி மேதாபட்கர் கோரிக்கை.
6. கடந்த இரு மாதங்களாக உயர்த்தப்படாமல் இருக்கும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ` 5 வரை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றன.
7. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலை சுற்றி ` 3.80 கோடியில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளதாக தேவஸ்தான தலைமைச் செயல் அதிகாரி அறிவிப்பு.
8. மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் 3 விமானங்களில் முழுவதும் பெண் ஊழியர்களையே பணிக்கு நியமித் துள்ளது.
9. அடுத்த ஆண்டுமுதல் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், அவ்வையார் விருது என்னும் உயரிய விருது ஒன்றை சிறந்த பெண்மணி ஒருவருக்கு, சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கிட தமிழகமுதல்வர் ஆணை.
10. ஆஸ்திரேலியா,இலங்கை அணிகள் மோதும் 3ஆவது இறுதி மட்டைப்பந்துப் போட்டி அடிலெய்டில் இன்று நடக்கிறது.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...