2 ஜூலை, 2012

02/07/2012


1..மெக்சிகோ அதிபர் பெலிபி கால்ட்ரனின் பதவி காலம் முடிவடைவதால், நேற்று அதிபர் தேர்தல் நடந்தது.
2. ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணுஉலை விபத்து ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களை ஆய்வு செய்ததில், பெரும்பான்மையானவர்களின் உடலில் கதிரியக்கம் கொண்ட சீசியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3. தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம் என, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
4. அகில இந்திய பணியில் உள்ள அதிகாரிகளில்,சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
5. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 60 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாக 3ஆவது ஏவுதளத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.
6.  இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தஜிகிஸ்தான் நாட்டுக்கு 2 நாள் பயணம் செய்கிறார்.
7. மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு மருத்துவக் கல்வித் துறை புதிதாக 3,595 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள்ளது.
8. மாணவர்கள் அனைவரும் மரம் நட வேண்டும்; அதிக மரங்கள் நட்டாலே சுனாமி, தானே புயல் போன்ற பேரழிவுகளைத் தடுக்கலாம்  என சட்டப்பேரவைத் தலைவர் டி. ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
9. நேற்று நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை, ஸ்பெயின் அணி வென்று, யூரோ கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.
10. விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு, இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முன்னேறினார்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...