12 மார்ச், 2012

13/03/2012


1. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அருகில் உள்ள கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 16 பேர் பரிதாபமாக பலியாயினர். 
2. அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், தற்போதைய அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
3. தலிபான்கள் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன், சமாதான பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு இன்று அழைப்பு விடுத்துள்ளது. 
4. உத்தரகாண்ட் முதல்வராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் பகுகுணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5.  உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதாரம் உறுதியாக உள்ளது என்று, குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
6. ஓசோன் படலம் எவ்வாறு அமைந்துள்ளது, சுற்றுச்சூழல் பாதிப்பின்மூலம் அது எவ்வாறு தேய்வடைகிறது என்பதை விளக்கி, வேதியியலுக்கான நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர், எஃப் ஷேர்வூத் ரெளலண்ட் காலமானார். 
7. அணுமின் நிலைய பாதுகாப்பு விஷயத்தில், எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்தார்.
8. காஷ்மீரின் வடமேற்கில் உள்ள கில்ஜித்தை மையமாகக்‍ கொண்டு,நேற்று முற்பகல் ஏற்பட்ட நிலநடுக்‍கம், ரிக்‍டர் அளவுகோலில், 5.6ஆக பதிவானது.
9.  தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
10. இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தனது 600ஆவது வெற்றியைப் பதிவு செய்தார். 

Free Code Script

12/03/2012


1. ஜப்பானில், 16 ஆயிரம் பேரை பலிவாங்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் முதலாண்டு நினைவு நாள், நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 
2.  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதமாற்றம் செய்வது அதிகரித்துள்ளதாக,பாகிஸ்தானுக்கான மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
3.  சீனாவின் விண்வெளி நிறுவனம், 2015 ஆம் ஆண்டுக்குள் 100ஏவுகணைகள், செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.
4. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
5. பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
6.  நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
7. இந்தியாவில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ` 10 ஆயிரம் கோடிக்கு மேல் பெறுகின்றன.
8. உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
9.  நிலநடுக்கம், சுனாமி, அணுமின் நிலைய விபத்து ஆகிய மூன்று பேரழிவுகளிலிருந்தும் மீண்டு, ஜப்பான் ஓராண்டுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக, சென்னையிலுள்ள ஜப்பான் துணைத் தூதர் தெரிவித்தார்.
10.  ஆசிய கோப்பை மட்டைப்பந்துப்போட்டியின் முதல் ஆட்டத்தில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...