29 பிப்ரவரி, 2012

01/03/2012


1. இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் றிவித்தது.
2. அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில், இராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை, தமிழ்நெட் இணையத்தில் வெளியிடுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3.  கேரளக் கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் 2 பேர், இத்தாலியக் கப்பலின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
4. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் சி அறையில், 3 கிலோ எடை கொண்ட 30 தங்கக் குடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5. இந்த ஆண்டு இறுதியில் 4ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் விடப்படும் என்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
6. சில்லறை வணிகத்தில், அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் முடிவை, ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
7.  மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின் சகோதரரின் மகன், போக்குவரத்துக் காவலரைக் கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக, கைது செய்யப் பட்டார்.
8.இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவி்ததுள்ளனர்.
9.தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்குவதால், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில், சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
10. இளம்வீரர்களுக்கு வழிவிடும் வகையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...