28 பிப்ரவரி, 2012

29/02/2012


1. இந்த ஆண்டின், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ,முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
2. ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் இன்று கொண்டு வரப்படவுள்ளது.
3.  2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைக்குமிடையே நடந்த இறுதிப் போரில் 9000 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ,இலங்கை அரசு அறிவித்துள்ளது.
4. அமெரிக்காவில், உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த ஆண் குழந்தை, அதிசயமாக உயி்ர் பிழைத்துள்ளது.
5. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த, அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
6. தமிழகத்தில், குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை, மேலும் ஒரு மாதம் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7. தமிழகத்தில் நிலவி வரும் மின்பிரச்னையை தீர்க்க, கூடங்குளம் அணுமின் திட்டம் அவசியம் தேவை என, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைத்தின் முன்னாள் தலைவரும, மூத்த விஞ்ஞானியுமான, பல்தேவ் ராஜ் கூறியுள்ளார்.
8. வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட, ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள, வாட்டர்பால்ஸ் மற்றும் அட்டகட்டி வனப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
9. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டியில், வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு, சகாரா இந்தியா பரிவார் நிறுவனம் சார்பாக `1 கோடியே 20 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்குகிறது. 
10. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கூடுதல் (போனஸ்)புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளது.

Free Code Script

28/02/2012


1. இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட, பேசாப்படமான, “தி ஆர்ட்டிஸ்ட் படத்துக்குக் கிடைத்துள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில், அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
3. அருணாச்சல பிரதேசத்துக்கு, தான் பயணம் மேற்கொள்வதை சீனா எதிர்ப்பது மிகவும் துரதிஷ்டமானது என்று, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.
4. நாடு தழுவிய அளவில் இன்று வங்கி ஊழியர்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் வெகுவாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
5. தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
6. கூடங்குளம் எதிர்ப்பாளர்களை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்.
7. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். 
8.பேருந்துக் கட்டண உயர்வால்,தமிழகஅரசுக்கு மாதத்திற்கு `196 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது என,போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
9.கோவை மாநகராட்சியின்,முதல் பெண் துணை மேயராக,லீலாவதி உன்னி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
10.ஆஸ்திரேலியாவில் நடைபெறும்,முத்தரப்பு,ஒருநாள் மட்டைப்பந்துப் போட்டி, இறுதி லீக்கில்,இந்தியா,இன்று இலங்கையை எதிர்கொள்கிறது.

Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...