30 ஜனவரி, 2012

30/01/2012


1. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுகளைத் தடுப்பதிலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் இந்தியா 125-வது இடம் வகிப்பதாக யேல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.  இந்தியா - பாகிஸ்தான் உறவு சுமுகமாக வேண்டியது மிகவும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரசா கிலானி கூறியுள்ளார்.
3. சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை, எதிர்த்தரப்பினரிடம் இருந்து கைப்பற்றுவதற்காக, அதிபரின் ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
4.பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்கள், பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கின்றன. 
5.  மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில், சாதாரண வகுப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தெரியவந்துள்ளது.
6.  ஊழலால் விளையும் தீமைகள் குறித்து, பள்ளிப் பாடநூல்களில் புதிய பாடத்திட்டங்களைப் புகுத்தி, மாணவ, மாணவியரிடையே ஊழல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
7. இந்திய, ஜப்பான் கடலோரக் காவல் படையினர் இணைந்து, சென்னை அருகே, நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர். 
8.  வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில், 141வது தைப்பூச ஜோதி தரிச விழா எதிர்வரும், 7ஆம் தேதி நடக்கிறது. 
9. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாமல், படுதோல்வி கண்டதன் எதிரொலியாக, டெஸ்ட் தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர் இந்திய வீரர்கள்.
10. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆடவர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
                                                                

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...